Dec 15, 2010

SECRETS&LIES-கருப்பு உண்மைகள்


மைக் லீ இயக்கத்தில் வெளிவந்த பிரிட்டிஷ் காவியம்.


தன் வளர்ப்பு பெற்றோர் மறைவுக்குப்பிறகு தன் ஒரிஜினல் தாயைத்தேடி முயற்சித்து கண்டுபிடித்து விடுகிறாள்.தொலைபேசியில் தன் தாயை நேரில் காண விருப்பம் தெரிவிக்கிறாள்.பொது இடத்தில் இருவரும் சந்திக்கின்றனர்.மகளைக்கண்ட தாய் அதிர்ச்சியுறுகிறாள்.காரணம் மகள் ஹார்டென்ஸ் கறுப்பினம்.தாய் சிந்தியா வெள்ளையினம்.ஹார்டன்ஸ் தன் மகளாக இருக்க வாய்ப்பே இல்லை என மறுக்கிறாள் சிந்தியா.ஆதாரங்களை காட்டி நிறுபிக்கிறாள் ஹார்டன்ஸ்.உண்மை அறிந்த பிறகு குற்றஉணர்ச்சியில் கதறுகிறாள் சிந்தியா.தனக்கு 21வயதில் ரோக்ஸேன் என்ற மகள் இருப்பதாகவும் அவளுக்கு உண்மை தெரியக்கூடாது என்று உறுதிமொழி வாங்குகிறாள் சிந்தியா.பின்னர் அடிக்கடி ரகசியமாக சந்தித்து உறவை பலப்படுத்துகின்றனர்.தனது சகோதரன் மோரிஸ் வீட்டில் நடைபெறும் ரோக்ஸேன் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஹார்ட்டனை அழைக்கிறாள் சிந்தியா.அக்குடும்பம் ஹார்ட்டனை ஏற்றுக்கொண்டதா? என்பதே கிளைமாக்ஸ்.


உறவுகளின் இணைப்பே மெல்லிய நூலிழையில் இயங்குகிறது....அதை எவ்வாறு பலப்படுத்துவது என்பதை பாடமாக்கியிருக்கிறார்

மைக் லீ.

சிந்தியா

கருப்பின மகள் ஹார்டென்ஸ்

வெள்ளையின மகள் ரோக்ஸேன்

சகோதரன் மோரிஸ்

மோரிஸ் மனைவி மோனிகா

இந்த பஞ்சபாண்டவர்கள் இப்படத்தை இதிகாசமாக்கியிருக்கிறார்கள்.

கறுப்பினத்தவரின் மரணம்....வெள்ளையினத்தவரின் திருமணம் எனத்துவங்கும் அறிமுகக்காட்சியே இப்படம் உலகசினிமா என்று முத்திரை குத்தி விடுகிறது.

ஒரு கதாபாத்திரத்தின் தன்மை என்ன?அப்பாத்திரத்துக்கு ஏற்ப்படும் பாதிப்பு என்ன?அப்பாதிப்பின் தன்மையை எவ்வாறு அவர்களது உடல்மொழியால் வெளிப்படுத்துவது...என்பதை இப்படத்தின் மூலம் கற்க்கலாம் நமது இயக்குனர்கள்...குறிப்பாக மிஷ்கின்.




Nov 24, 2010

El Violin-புரட்சி கீதம்[2005]


எல் வயலின் மிகச்சிறிய படம்.ஆனால் மிகச்சிறந்த படம்.மெக்சிகோவில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் கதை நிகழும் நாடு எது என்று சுட்டிக்காட்டவில்லை.இதனாலேயே இப்படத்தை பாதிக்கப்பட்ட எந்த ஒரு நாட்டோடும் பொருத்தி பார்க்க முடியும்.இலங்கை என்றால் இலங்கை .....பர்மா என்றால் பர்மா.சொந்த நாட்டு ராணுவத்தாலேயே பழி வாங்கப்படும் அனைத்து நாட்டு மக்களுக்கும் இப்படத்தை அர்ப்பணித்துள்ளார் இயக்குனர் Francisci Vargas

படத்தின் டைட்டில் காட்சியிலேயே ராணுவத்தின் வன்முறை தொடங்கி விடுகிறது.ஆண்களுக்கு அடி உதை...பெண்களுக்கு வன் புணர்ச்சி..அதிர்ச்சிமிக்க இக்காட்சிகளிலிருந்து நம்மை மீட்டெடுக்க வருகிறது ஒரு வயலின் இசை.
Don Plutarco ஊனமுற்ற தனது ஒரு கையில் வயலின் போவைக்கட்டிக்கொண்டு அற்ப்புதமான இசையை தானமாக வழங்குகிறார்.மகன் கிடார் இசைக்க.... பேரன் பொதுமக்களிடம் கையேந்தி பணத்தை சன்மானமாக பெறுகிறான்.கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்தது இதற்க்காகவா???????மகன் கெரில்லாப்போராளிகளில் ஒருவன் என்பதும் ஆயுதம் வாங்க வந்திருப்பதும் அடுத்தடுத்த காட்சிகள் புலப்படுத்துகின்றன.திரும்பி கிராமத்துக்கு வரும்போது எதிரில் கிராமமே காலியாகி ஒடி வந்து கொண்டு இருக்கிறது.ராணுவம் அந்த மலை கிராமத்தை வேட்டையாடிக்கொண்டு இருக்கிறது. டான் ப்ளுட்டார்க்கோவின் மருமகள்,பேத்தி உட்ப்பட பெரும்பாலோர் ராணுவத்தால் இழுத்து செல்லப்படுகின்றனர்.டானின் போராளி மகன் தப்பித்து போராளிக்குழுவினரோடு கலக்கிறான்.

டான் பக்கத்து கிராமத்து பணக்காரனிடம் நிலத்தை அடமானமாக வைத்து ஒரு கோவேறு கழுதையை பெற்று வருகிறார்.தனது வயலினை மட்டும் எடுத்துக்கொண்டு கிராமத்தை ஆக்கிரமித்திருக்கும் ராணுவத்தினரை சந்திக்க கழுதை மேல் சவாரி செய்து வருகிறார்.ராணுவம் கைது செய்து கேப்டன் [விஜயகாந்த் அல்ல]முன்னால் நிறுத்துகிறது.
எதற்க்கு வந்தாய்?
என் சோளக்காடு அறுவடைக்கு காத்திருக்கிறது.பாராமரிக்க வந்தேன்.
கையில் என்ன?
வயலின்.
எங்கே வாசி?
இசை இரும்பு இதயத்தை கரும்பாக மாற்றி டானின் வசமாக்குகிறது.தினமும் டான் சோளக்காட்டை பார்வையிடலாம் பதிலுக்கு தனக்கு வயலின் கற்று தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறான்.டான் சோளக்காட்டை பார்வையிட்டு அங்கே ரகசியமாய் புதைக்கப்பட்டிருந்த ஆயுதப்புதையலில் இருந்து கொஞ்சம் புல்லட்களை எடுத்து வயலின் பாக்சுக்குள் வைத்து மறைத்து கடத்துகிறார்.
கடத்தல் வெற்றிகரமாக நடந்ததா?
டான் மாட்டிக்கொண்டாரா?
போராளிக்குழுக்கள் என்ன ஆனது?
கிளைமாக்ஸ் விவரிக்கிறது ....படத்தை பாருங்கள்.
பிளாக்&ஒயிட்டில் படமாக்கி கலைபடைப்பாக நமக்கு சமர்ப்பித்தவர் ஒளிப்பதிவாளர் Martin Boege. டான் ப்ளுட்டார்க்கோவாக வாழ்ந்திருப்பவர் Angel Tavira.இவரது முகத்தில் முதுமை வரைந்த சுருக்கங்கள்.... அல்ல அல்ல ...அது அந்த மலைவாழ் மக்களின் நெருக்கடிகள்.சமகால அரசியல் படங்களில் இது ஒரு மாஸ்டர்பீஸ்.எல் வயலினை தனது முதல் படைப்பாக தந்து உலகமெங்கும் 32 விருதுகளை வாரிக்குவித்திருக்கிறார் எழுதி இயக்கி தயாரித்த Francisco Vargas.
இப்படத்திற்க்கு போட்டியாக 2005 லேயே வ குவார்ட்டர் கட்டிங் தயாரித்து மோத விட்டிருக்கவேண்டும்.ஜஸ்ட் மிஸ்.....


Nov 8, 2010

Halfaouine-[1990]பையன் வயசுக்கு வந்துட்டான்

பதின்வயது..... புரியாத ரகசியங்களும்..... சொல்லமுடியாத விருப்பங்களும்.... அலைக்கழிக்கும் இனிமையான அவஸ்தைப்பருவம்.இதை மையக்கருவாக அமைத்துவிட்டால் திரைப்படத்தின் சுவாரஸ்யத்திற்க்கு பஞ்சமிருக்காது.உதாரணமாக மெலினா...தமிழில் அழியாதகோலங்கள்....
துனிசியா நாட்டு சிறுவனின்......பிஞ்சிலே பழுக்கத்துடிக்கும் பதட்டத்தை அற்புதமாக படமாக்கியவர் இயக்குனர் Ferid Boughedir உலகசினிமாவுக்கே உரிய கலைத்தன்மை சற்று குறைவாக இருந்தாலும் இப்படத்தை அறிமுகம் செய்யக்காரணம் இப்படத்தின் காட்சிகள்..இஸ்லாமிக் நாடுகளின் படங்களில் நாம் காணவேமுடியாத நிர்வாணக்காட்சிகள்...அழகாக....கலைநயத்துடன் காட்சியளிக்கிறது. நோராவை அவனது தாய் குளிப்பாட்டும் காட்சியில் துவங்குகிறது படம்.பொதுக்குளியலறையில் ஏராளமான பெண்கள்....தாராளமாக ரசிக்கிறான் நோரா.
தன்னை விட வயதில் மூத்தவர்களோடு மட்டுமே சினேகம் கொள்கிறான் டீனேஜ் இயல்புப்படி... அவர்கள் அவனது கேள்விகளை கேலியாக்குகிறார்கள்.ஆனால் விடையாக வீட்டுக்கு அழகிய வேலைக்காரி [தமன்னா சாயல்] வருகிறாள்.
குளியலறையில் கண்களால் தரிசித்ததை கரங்களால் ஸ்பரிசிக்கும் வாய்ப்பு கிட்டியதும் வாலிபத்தின் கதவு திறக்கிறது நோராவுக்கு.சின்னசின்ன நகாசு வேலைகளில் துனிசியாவின் வாழ்வியலை தரிசிக்கும் பாக்கியத்தை வழங்குகிறார் இயக்குனர்.
நமது பதின்வயது சேட்டைகளை ஞாபகப்படுத்தும் ஆட்டோகிராப் தன்மை படம் முழுக்க நிரவிக்கிடக்கிறது.....என்ஜாய்.....

Nov 2, 2010

Shine-1996 இசைமேதை



மேதைகள் பிறப்பதில்லை...உருவாக்கப்படுகிறார்கள் என்பார்கள்.இதற்க்கு சரியான உதாரணம் David Helfgott.

இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பியோனோ மேதையின் வாழ்க்கை பாடம்தான் படம்.

ஆஸ்திரேலியாவில் உருவான இப்படத்தை இயக்கியவர் Scot Hicks

கொட்டும் மழையில் டேவிட் அறிமுககாட்சியிலேயே அவரது காரெக்டரின் எக்ஸெண்ட்ரிக் தன்மையை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.பின்பு பிளாஷ்பேக் உத்தியில் டேவிட்டின் கடந்தகால வாழ்க்கை அற்ப்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.சிறு வயதிலேயே டேவிட் படிப்பது... விளையாடுவது... தூங்குவது.... எல்லாமே பியோனோ.உள்ளூர் போட்டிகளில் வெற்றி வாகை சூடியதன் பயனாக நல்ல பியோனோ டீச்சர் பரிசாக கிடைக்கிறார்.14 வயதில் அமெரிக்கா செல்ல வாய்ப்பு வருகிறது.தந்தை சர்வாதிகாரத்துடன் அனுப்ப மறுக்கிறார்.பியோனோடீச்சர் இவனை அனுப்பி வைக்க சர்வ வழிகளிலும் போராடுகிறார்.தாயாரும் மறுக்கிறார்... “அவனை விட்டுவிடுங்கள்...இன்னும் அவன் படுக்கையை ஈரமாக்குகிறான்”

19வயதில் லண்டன் ராயல் காலேஜ் ஆப் மியூசிக் அழைக்கிறது.இப்போது தந்தையின் எதிர்ப்பை மீறி புறப்படுகிறது இந்த பியோனோ புயல்.இவனது இசை திறமை வளர்கிறது..... கூடவே எக்ஸெண்ட்ரிக் தன்மையும்.உதாரணமாக ஒரு காட்சி... எதிரில் வரும் பெண்ணுக்கு வணக்கம் சொல்கிறான்.அந்தப்பெண்ணோ பேயைக்கண்டது போல் மிரண்டு ஓடுகிறார்.காரணம் மேலே புஃல்சூட் அணிந்த ஜேம்ஸ்பாண்ட்...கீழே ஜட்டி அணியாத ஆதாம்.

Rachmaninoffஎன்ற மேதையின் 3வது இசைக்கோர்வையை வாசித்து பதக்கம் வெல்கிறான்.ஆனால் முற்றிலும் மனநிலை பிறண்டு போகிறான்.மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடையாமல் திரும்புகிறான்.முறிந்த மனதிற்க்கு மூலிகையாக சில்வியா வருகிறாள்.இவனது வெற்றிக்கு பின்னால் நிற்க்கிறாள்.
இப்படத்தின் இளையராஜா David Hirschfelder .இவரது இசைக்காக ஒருமுறை.....

டேவிட்டாக வாழ்ந்தவர்Geoffrey Rush.இவரது நடிப்புக்காக ஒரு முறை..... என பலமுறை பார்க்கலாம்....தப்பில்லை.

Oct 26, 2010

Sophie Schooll-2005 புரட்சிப்பெண்

**************************சோஃபி ஸ்கால் ஒரிஜினல் புகைப்படம்****************
சோஃபி ஸ்கால்.... இப்படத்தின் டிவிடி கவரை படிக்கும்போது ஒரே ஒரு அம்சம் உடனே என்னை பார்க்க தூண்டியது.சிறந்த வெளிநாட்டுப்படம் என்ற ஆஸ்கார் அவார்டு கொடுக்கப்படவில்லை .நாமினி என்ற அந்தஸ்து மட்டும் அளித்துள்ளனர்.[நல்ல படத்துக்கு பெரும்பாலும் ஆஸ்கார் அவார்டு கொடுக்க மாட்டார்கள்]இந்த ஒரு தகுதி போதாதா......உடனே படத்தை பார்த்து விட்டேன்.இப்படத்தின் இயக்குனர் Martin Langer

21 வயது புரட்சிப்பெண் சோஃபி ஸ்கால்.நாஜிக்கும்பலை எதிர்த்து உருவான இயக்கம் ஒயிட் ரோஸ்.கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை வழியில் போராடும் இயக்கம்.இந்த இயக்கத்தில் தனது சகோதரன் ஹன்ஸ் ஸ்காலுடன் இணைந்து போராடுகிறாள் சோஃபி. நாஜிக்கும்பலைக்கண்டித்து ஒரு நோட்டிஸ் ஒன்றை தயாரித்து மியூனிச் யூனிவர்சிட்டி வளாகத்தில் பரப்புகின்றனர் இருவரும்..நாஜிகும்பல் கைது செய்து விசாரிக்கின்றனர்.முதலில் குற்றத்தை மறுத்த சோஃபி ஆதாரங்களை அள்ளி வீச ஒத்துக்கொள்கிறாள்.விசாரணை அதிகாரி சரியான விடாக்கண்டன்.மொத்த இயக்கத்தையும் காட்டிக்கொடுக்கும்படி வலை விரிக்கிறான்.சிக்காத இந்த சிங்கக்குட்டி சாதிக்கிறாள் தானும் தமையனும் மட்டுமே பொறுப்பு என்று உறுதி காட்டுகிறாள் இந்த ஜெர்மன் நாட்டு வேலு நாச்சியார்.குற்றத்தை உறுதி செய்து கோர்ட்டுக்கு அனுப்புகிறான் அதிகாரி.


ஹிட்லரின் அடிவருடிகளே ஜட்ஜ்...அரசு வக்கீல்...குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராகும் வக்கீல் கூட...எப்படி நீதி கிடைக்கும்??????


மரண தண்டனை பரிசாக கிடைக்கிறது .


வழக்கமாக தீர்ப்பு வழங்கப்பட்டு 99 நாள் கழித்துதான் தண்டனை நிறைவேற்றப்படும்.இந்த புரட்சி வீரர்களை அன்றேக்கொல்ல பேயாட்சி..... சாத்திரம் விதிக்கிறது.இறுதியாக தன் பெற்றோரை சந்திக்கிறாள் இந்த வீரமங்கை.இந்த ஒரு காட்சி போதும் உலகில் உள்ள அத்தனை அவார்டுகளையும் அள்ளிக்கொடுக்க......


இந்த காட்சியை விவரிக்க என் தமிழ் தாயே.....தமிழில் உள்ள அத்தனை வார்த்தைகளையும் எனக்கு வழங்கு.....


பெருமையில் கன்னம் பூரிக்க...பெருமித்தில் நெஞ்சு விடைக்க...கண்கள் மட்டும் கண்ணீரில் மிதக்க.. மகளை வாரியணைக்கும் பெற்றோர்....சிங்கங்களைப்பெற்ற சிங்கங்கள் அல்லவா!!!!!!!!!

கொலைக்களத்தில் கில்லட்டில் தலை கொடுக்க வீர நடை போட்டு செல்லும் போதும் சொல்கிறாள் ஒரு சொல்.. “வானத்தில் இன்னும் சூரியன் பிரகாசமாக இருக்கிறான்”

இந்த நல்ல உயிர்களை பறிக்க நாஜி எடுத்துக்கொண்ட நாட்கள் நான்கே நான்கு நாட்கள்.நோட்டிஸ் வீசப்பட்ட நாள்..... 1943 பிப்ரவரி 18.....உயிரைப்பறித்த நாள் 1943 பிப்ரவரி 22.....
புரட்சி வீரர்களின் கல்லறையின் ஒரிஜினல் புகைப்படம் முன்னால் நின்று சொல்வோம்....

வீரவணக்கம்....வீரவணக்கம்...சோஃபி ஸ்காலுக்கு வீரவணக்கம்.

Oct 23, 2010

Katyn-2007 மரணக்காடு



ஊசியிலைக்காடு கேள்விப்பட்டு இருப்பீர்கள்.மரணக்காடு???????????
Katyn என்ற இடத்தில் 22,000 பேர்களை விதைத்து ராணுவத்தினர் உருவாக்கியது.

ஒரு பெண்ணை ஏககாலத்தில் இரண்டு பேர் கற்பழித்தால்......இதே நிலைதான் இரண்டாம் உலகப்போரில் போலந்து பெற்றது.ஒருபுறம் ஜெர்மனி..மறுபுறம் சோவியத் ரஸ்யா.
இருநாடுகளுக்கிடையே சிக்கி சீரழிந்ததை படம் பிடித்து காட்டியிருக்கிறார் அந்திரே வாஜ்டா.

1940ல் அன்னா காத்திருக்கிறாள் சோவியத் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட கணவனுக்காக.....

அன்னாவின் மாமியாரும் காத்திருக்கிறார் ஜெர்மன் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட கணவனுக்காக.....
காத்திருத்தல்தான் உண்மையான மரணதண்டனை என்கிறார் அ.முத்துலிங்கம் 'அங்கே இப்ப என்ன நேரம்?' நூலில்...[தமிழினி வெளியிடு]
ஜெர்மானியர்கள் தங்களது ஆக்கிரமிப்பு பகுதிகளில் இப்படுகொலைகளை நிகழ்த்தியது சோவியத்துதான் என்று ஆவணப்படத்தை காட்டி பிரச்சாரம் செய்கிறது.சோவியத்தும் ஒரு ஆவணப்படத்தைக்காட்டி பிரச்சாரம் செய்கிறது.

உண்மையை.... அன்னாவின் கணவனது ரத்ததில் குளித்த டைரி..... படம் பிடித்து காட்டுகிறது.
இப்படுகொலையின் அலறலை....சிதிலத்தை.....ஆவணப்படித்தியிருக்கிறது Pawel Edelman ஒளிப்பதிவு....பக்கபலமாக Krzysztof Pendereeki பின்னணி இசை.இறந்தவர்களின் இறுதிக்கதறல் இசையில் கலந்திருப்பதை இதயம் உள்ளவர்கள் மட்டுமே உணரமுடியும்.அந்த கதறலில் இயக்குனர் வாஜ்டாவின் தந்தையின் குரலும் கலந்து இருப்பதை நாம் தெரிந்து கொண்டால் சோகம் நேரடியாக....அதிரடியாக.... தாக்கும்.இதனால்தான் இவரது பெரும்பான்மை படங்களில் போரின் பேரழிவே மையக்கருவாக இருக்கும்.
படத்தினூடே வரும் குட்டிக்காதல் சிறுகதை அவலச்சுவையை அகப்படுத்துகிறது.
இப்படத்தை பார்த்துவிட்டு இடும் சிறப்பான பின்னூட்டத்திற்க்கு வாஜ்டாவின் டிரையாலஜி படங்களான
A Generation
Kanal
Ashes and Diamonds
டிவிடி பரிசாக குரியரில் அனுப்பி வைக்கிறேன்.
படம் பார்க்காதவர்களுக்கு கலைமாமணி ஜெயசித்ரா இயக்கத்தில் உருவான உலக்கசினிமா “நானே என்னுள் இல்லை”படத்தின் டிக்கெட் சிறப்பு பரிசாக வழங்கப்படும்.

Oct 20, 2010

Not one less-டீச்சரம்மா


ஜாங் யீமூ வர்த்தக சினிமாவின் மாபெரும் இயக்குனர்.பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட் உருவாக்குவதே இவரது வேலை.உ.ம் ஹீரோ[ஜெட்லீ]அதே சமயத்தில் ரியலிஸ்டிக் பாணியில் பயணம் செய்து அவார்டுகளையும் வசூலையும் வாரிக்குவிப்பது உப வேலை.நியோ ரியலிஸ்டிக் பாணியில் எடுக்கப்பட்ட படம் நாட் ஒண் லெஸ்.அனைத்து நடிகர்களுமே தொழில் முறை நடிகர்கள் அல்ல.அனைவருமே கிராமத்து விதைகள்.அவர்களது ஒரிஜினல் பெயர்களே படத்திலும் பயன்படுத்தப்பட்டது.
1990களில் பயணிக்கிறது கதை.அழகிய மலைக்கிராமம்....ஓராசிரியர் பள்ளி....ஆசிரியர் ஒரு மாதவிடுமுறையில் செல்லநினைக்கிறார்.


13 வயது வீ மின்சி தற்காலிக டீச்சராக நியமிக்கிறார்.ஓரே ஒரு நிபந்தனை “பள்ளியில் ஒரு மாணவன் குறையக்கூடாது”.வீ மின்சி ஒரு வளர்ந்த குழந்தை .பள்ளி மாணவர்களை விட இவளது அறிவு கம்மி.ஒரு வழியாக வகுப்பை ஒப்பேற்றிக்கொண்டு இருக்கிறாள்.சுட்டி மாணவன் ஒருவன் தப்பி அருகில் உள்ள நகரத்துக்கு வேலைக்காக செல்கிறான்.நகரத்துக்குச்சென்று அவனை மீட்பதே கிளைமாக்ஸ்.

எல்லா காட்சிகளிலுமே நகைச்சுவை நியாயமாக இருக்கிறது.ஆனாலும் ஒரு சோகத்தை ஒளித்து வைத்திருக்கிறது.மாணவர்களும் டீச்சரும் கோக் குடிக்கும் காட்சி...பானைச்சோற்றில் ஒரு பதம்.ஆளுக்கு ஒரு சொட்டுதான் கிடைக்கிறது.ஆனாலும் நீண்ட நாள் ஆசை நிறைவேறிய திருப்தி அந்த முகங்களில்.. கிராமங்கள் மீது ஊடகமும் கார்ப்பரேட் கம்பனிகளும் இணைந்து தொடுக்கும் வன்முறை.... இக்காட்சி நம் முகத்தில் அறைந்து சொல்கிறது.

இயற்க்கை ஒளி மட்டும் பயன்படுத்தி காட்சிகளை ஒவியமாக்கியவர் Hou Yong .பெரும்பான்மை காட்சிகளில் ஒளிந்து கொண்டு தேவைப்படும்போது மட்டும் வெளிவந்து இசையால் நம்மை கட்டிப்போடுகிறார் சீனத்து இளையராஜா Sam Bao
உலகசினிமாவில் ஜாங் யீமூ முத்திரை பதித்த மற்ற படங்கள்
The Road Home
Raise the Red Lantern
To Live
Riding alone for thousend miles
இந்தப்படங்களையும் பார்த்துவிட்டு வாருங்கள்...எனது அகில உலக
ஜாங் யீமூ ரசிக மன்றத்தில் உறுப்பினராக சேர்த்து கொள்கிறேன்.தலைவர் பதவி கோவையில் ராஜா என்பவர் பறித்துக்கொண்டு போய்விட்டார்.

Oct 14, 2010

உதிரிப்பூக்கள்-தமிழில் உலகசினிமா



உதிரிப்பூக்கள் தமிழில் நான் பார்த்த முதல் உலகசினிமா.தமிழில் வந்த முதல் உலகசினிமா பாதை தெரியுது பார்.இயக்கியவர் இந்தியாவின் முதல் உலகசினிமாவான சின்னமோளை உருவாக்கிய நிமாய்கோஸ்.தயாரித்தவர்கள் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள்.இப்படம் ஓடினால் தங்கள் தொழில் நாறி விடும் என்று கருதிய ஏ.வி.எம் போன்ற மசாலா நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து படத்தை வாங்கி பிட் படங்கள் ஓடும் நாலாந்தர தியேட்டர்களில் ரீலிஸ் செய்து மக்களைச்சென்றடையாமல் பார்த்துக்கொண்டனர்.எம்.பி.சீனிவாசன் இனிய இசையில் வெளியான பாடல்கள் மட்டும் இன்றும் நம் செவிக்கு உணவளித்துக்கொண்டிருக்கிறது.




தென்னங்கீற்றின் ஊஞ்சலிலே.....




......................................................................




.............................................................................




சிட்டுக்குருவி பாடுது தன் பெட்டை துணை தேடுது......





சின்னசின்ன மூக்குத்தியாம் சிவப்புக்கல்லு மூக்குத்தியாம்......





உதிரிப்பூக்களை உருவாக்கிய மகேந்திரன் உருவானது முள்ளும் மலரும் படத்தில்தான்.தங்கப்பதக்கம் போன்ற மசாலா படங்களுக்கு கதை வசனம் எழுதி புகழ் பெற்றிருந்த மகேந்திரனுக்கு கதையே கேட்க்காமல் வாய்ப்பளித்தார் ஆனந்தி பிலிம்ஸ் வேணுச்செட்டியார்.ஆனால் படத்தை பாதியில் நிறுத்தச்சொல்லிவிட்டார்.காரணம் கேட்டதற்க்கு,”ரஜினி கை,காலை ஆட்டி நடித்தால்தான் ரசிப்பார்கள்....நீ ரஜினிக்கு கை இல்லாமல் படமெடுக்குறீயாமே..என் காசை கரியாக்கவா..போ வீட்டுக்கு”என்றார். கமல் கேள்விப்பட்டு சமரசம் செய்தார்.படம் நட்டமானால் நான் அடுத்த படத்துக்கு கால்ஸீட் தருகிறேன் என்று உறுதியளித்தார் கமல்.ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பெண்டிங்...இனி பைசா தரமுடியாது எனச்செட்டியார் முரண்டு பிடிக்க இப்போதும் கை கொடுத்தது கமல்.அந்தப்பாடல் படமாக்க கைக்காசை கொடுத்தார் கமல்.அந்தப்பாடல் ..செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்......





இவ்வளவு உதவி செய்த கமலும்...உதவி பெற்ற மகேந்திரனும் ஏன் இணைந்து ஒரு படம் கூட தரவில்லை????????




ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு மவுஸ் வேலை செய்யமுடியாது.





முள்ளும் மலரும் மகத்தான வெற்றிபெற்றதில் அப்படத்தின் ஒளிப்பவாளர் பாலுமகேந்திராவின் பங்கு அதிகம் என்று மீடியாவும்,சினிமா இண்டஸ்ட்ரியும் சேர்ந்து கதைத்தன.எனவேதான் அசோக்குமாரோடு கை கோர்த்தார்.இவர்களது கூட்டணியில் வந்த வெற்றி படைப்புகள்




நெஞ்சத்தை கிள்ளாதே,உதிரிப்பூக்கள்,மெட்டி.




தமிழ்சினிமா உலகசினிமா பாதையில் கூட்டிச்சென்ற டிரண்ட்செட்டர் மகேந்திரன்.அந்தப்பாதை அடைத்து மசாலா பாதையில் திருப்பிவிட்டது ஏவி.எம்.என்னின் முரட்டுக்காளையும்,சகலகலாவல்லவனும்.





மகேந்திரனின் மாஸ்டர்பீஸ் உதிரிப்பூக்கள்.இன்றளவும் இப்படத்தின் தரம் இமயம்.




மனைவியின் தங்கை அழகிய நங்கை....அவளை தாரமாக்க துடிக்கிறான் நாயகன்.இவனது ஆசைக்கு எண்ணெய் வார்க்கும் சுயநலமிகளால், பலியாகிறான்.இவனது குழந்தைகள் உதிரிப்பூக்களாகின்றன.




விஜயன்,அஸ்விணி,சாருஹாசன்,சரத்பாபு என அனைவருமே யதார்த்தப்பிரதிகள்.




இளையராஜா இசையில் மோனாலிசப்பாணி கடைப்பிடித்திருப்பார்..... அழகிய கண்ணே பாடலில்..ஒரு தாயின் சந்தோசமும்,மனைவியின் துக்கமும் சரிவிகிதக்கலவையாக ஒலிக்கும்.பின்னணி இசையாக அநேககாட்சிகளில் மவுனத்தை இசையாக வழியவிட்டிருப்பார்.




படத்தின் டைட்டிலில் கதை புதுமைப்பித்தன் என்று வரும்.கதை படித்துவிட்டு படம் பார்ப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியும்.மகேந்திரன் மகத்துவம் தெரியும்.
இப்படத்தின் பாக்ஸாபிஸ் வெற்றி எல்லா பொய்களையும் கலைத்துவிட்டது.ஈரான் நாட்டு பிலிம் இன்ஸ்ட்யூட்டில் இப்படம் பாடம்.இந்திய அரசும் இப்படத்தை பெருமைக்குறிய சொத்தாக வாங்கி பெருமை சேர்த்துக்கொண்டது.

Oct 9, 2010

The purple Rose of cairo-நடிகனின் சுயரூபம்







சீரியசான உலக சினிமா மத்தியல்... இப்படம் ஒரு ஜாலி திருவிழா.ஆனால் திருவிழாவில் பலி கொடுப்பது உண்டே...இங்கு பலியாடு சினிமா ஹீரோக்கள்.

ஹாலிவுட்டில் இருந்துகொண்டு ஹீரோக்களை இப்படி காயடித்த ஆண்மகன் வுடி ஆலன்...எழுதி இயக்கி இருக்கிறார்.

1930 ல் துவங்குகிறது படம்.அமெரிக்கா எத்தியோப்பியாவாக இருந்த காலம்.

கதாநாயகி சிசிலியா, அன்றாடம் அடி வாங்குகின்ற அடித்தட்டு மக்களில் ஒருத்தி.அவளின் தினசரி ஒரே சந்தோசம் சினிமா.ஒரே படத்தை தினசரி பார்ப்பாள்.ஒரு நாள் அவள் தினசரி பார்க்கும் சினிமா ஹீரோ,திரையில்
இருந்து நேரடியாக சிசிலியாவிடம் பேச ஆரம்பிக்கின்றான்.அது மட்டுமல்ல.. திரையில் இருந்து குதித்து சிசிலியாவின் சீட்டுக்கு அருகில் வந்து உரையாட ஆரம்பிக்கின்றான்..திரையில் இருக்கும் மற்ற காரக்டர்கள் திகைக்கின்றன.....சிசிலியாவும் திகைக்கிறாள்.... மற்ற ஆடியன்சும் திகைக்கிறார்கள்.....ஏன் படம் பார்க்கும் நாமும் திகைக்கிறோம்.இப்படி இருக்கவேண்டும் திரைக்கதை.நம் திரைக்கதாசிரியர்கள் வுடிஆலன் மூத்திரத்தை குடிக்கவேண்டும்..


இதற்க்கு பிறகு படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நீங்கள் பார்த்து அனுபவிக்கவேண்டியது .ஒரே ஒரு காட்சி மட்டும் சொல்லிவிடுகிறேன்....ப்ளீஸ்.....சினிமா ஹீரோவாக நடித்த....நடிகன் ...அவனும் களத்தில் குதிக்கிறான்..இவனது அறிமுக காட்சியிலேயே நடிகர்களது முகத்திரைகளை கிழிக்கிறார் வுடிஆலன்.'இப்படி உன் பட காரக்டர் ஊருக்குள் புகுந்து கலாட்டா செய்கிறதே' ...என்று கேட்டால் அலட்சியமாக தலை குலுக்குவான்.லாயர் போன் பண்ணி,'அடே பாவி அந்த காரக்டர் ஏதாவது கொலை ,கொள்ளை,கற்ப்பளிப்பு..... இப்படி எது செய்தாலும் மவனே நீதான் ஜெயிலுக்கு போகவேண்டும்' என்று எச்சரித்த பிறகு பதறி ஓடுவான் சிசிலியாவையும்,தனது காரக்டரையும் சந்திக்க.
இந்த இடத்தில்..... நமது ஊர் ஹீரோ மகள் திருமணம்.... ரசிகர்கள் வரக்கூடாது எச்சரிக்கை....சார் சமீபத்தில் நம்ம படம் ரீலிசாகணும்-மந்திராலோசனை ....ஊருக்கு ஊர் விருந்து பல்டி அறிக்கை.... ஞாபகம் வந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல..

சினிமா நடிகன் நிஜம் வேறு...நிழல் வேறு என்பதை சிசிலியாவுக்கும் நமக்கும் தெளிய வைக்கிறார் இயக்குனர்... கிளைமாக்ஸில்.....

வசூலில் மட்டுமல்ல விருதுகளையும் வாரி குவித்தது இப்படம்.

Oct 5, 2010

The Boy in the striped pyjamas-மரணம் தரும் ரணம்





John Boyne நாவலை படமாக்கியவர் Mark Homan.




ஆனநதவிகடனில் எஸ்.ராமகிருஸ்ணன் அற்புதமாக அறிமுகம் செய்து இருந்தார் இப்படத்தை.




படித்தவர்கள் விலகி வேறு பிளாக் போய்விடுங்கள்.மற்றவர்கள் பின் தொடருங்கள்.




ஹிட்லர் யூதர்களை கொன்று குவித்த வதை படலம்தான் கதைக்களம்.இந்த கொலைக்களம் பற்றி அறியாமல் இந்த ஊருக்கு வருகிறான் ப்ரூணோ என்கிற ஜெர்மானியச்சிறுவன் பெற்றோரோடு, கூடவே சகோதரியும்...




தந்தை ஹிட்லரின் ராணுவ அதிகாரி..




தூரத்தில் இருக்கும் பேக்டரியின் உயரமான சிம்னியில் இருந்து வரும் கரும் புகையில் யூதர்களின் ஆவி கலந்திருப்பதை அறிந்ததும் துடிக்கிறாள் ப்ரூனோவின் தாய்...ரசிக்கிறார்கள் தந்தையும் சகோதரியும்...இது எதுவும் அறியாத ப்ரூனோ யூதக்கேம்பில் வசிக்கும் ஸ்மியூல் என்ற யூதச்சிறுவனோடு இருக்கிறான் நட்ப்போடு..அந்த நட்ப்பின் ஆழம் அவனை மரணத்துக்கு கூட்டி செல்கிறது.ஆயிரம் யூதர்கள் கொல்லப்படுவதை ரசித்த ப்ரூனோவின் தந்தை, தன் மகனை மரணப்படுகுழியிலிருந்து மீட்க துடிக்கும் தவிப்புதான் கிளைமாக்ஸ்..




டிவி,செய்திதாள்களில் வரும் மரணச்செய்திகள் எதுவுமே நம்மை பாதிப்பது இல்லை...உற்றார்...உறவினர் அச்செய்திகளில் இல்லாதவரை....




1995ல் திரு.நாகேஸ் அவர்களை தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக ஒப்பந்தம் செய்யச்சந்தித்தேன்.வெளிநாடு செல்வதாகக்கூறி மறுத்தார்.சூழ்நிலை புரியாமல் வற்ப்புறுத்தினேன்.செய்தித்தாளை தூக்கிப்போட்டு ,இந்தச்செய்தியில் நீயோ..உன் சொந்தக்காரங்களோ இருந்திருந்தால் இங்கு வந்திருக்கமாட்டாய் என கோபித்தார்.செய்தித்தாளை காலையிலேயே படித்து விட்டுத்தான் சென்றிருந்தேன்.




செய்தி...பெட்ரோல் டேங்கர் லாரி மீது மணமகள் குடும்பத்தார் சென்ற வண்டி மோதி அனைவருமே மரணம்...மணமகளை தவிர...




இச்செய்தியின் பாதிப்பில் நாகேஸிருந்தார்..நான் இல்லை..




வெளிநாடெல்லாம் அவர் செல்லவேயில்லை என்பதை பிற்பாடு தெரிந்து கொண்டேன்..




இப்படம் பார்த்த பிறகு புரிந்து கொண்டேன்... நாகேஸ் ப்ரூனோவின் தாய் கேரக்டர்.....




நான்....????????????????

Sep 29, 2010

The chorus-டீச்சருக்கு மரியாதை


கோரஸ் ஜாலியான 10000வாலா.....

நான் மிகவும் ரசித்த ப்ரெஞ்ச் படம்..இயக்கம் Christophe Barrtier.

இந்தப்படம் ஒரே ஸ்ட்ரோக்கில் உங்களை வீழ்த்தி விடும்.....ஆட்டோகிராப் மாதிரி....

நீங்கள் படித்த பள்ளிக்கு கூட்டிச்செல்லும்..உங்கள் ஆசிரியரை ஞாபகப்படுத்தும்..

இப்படத்தின் வசியத்தன்மைக்கு...வெற்றிக்கு இதுதான் காரணம்...

நான் கல்விஅமைச்சரானால் இப்படத்தை எல்லா டீச்சர்களையும் பார்க்க ஆணையிடுவேன்..

குட் டீச்சர்..பேட் டீச்சர் இரண்டுக்குமே உதாரணம் இப்படத்தில் இருக்கிறது.

கிட்டதட்ட சிறுவர் ஜெயில் மாதிரி ஒரு ஸ்கூல்.அதற்க்கு நல்லாசிரியராக வருகிறார் நம்ம கதாநாயகன்.இம்மென்றால் அடி...ஏனென்றால் உதை கொடுக்கும் தலைமை ஆசிரியர்தான் வில்லன்...அத்தனை அராத்து மாணவர்களையும் இசையால் வசமாக்குகிறார் நம் நாயகன்..தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி மட்டும் பரிசாகப்பெறும் நாயகன் ஒரு மாணவனுக்கு வெற்றி விருந்தளிக்கிறார்...

இப்படம் என் ஆசிரியரை ஞாபகப்படுத்தி உணர்ச்சிப்பெருக்கில் தத்தளிக்க வைத்தது.என் வகுப்பில் என்னோடு ஆறு பேர் ஆங்கிலத்தில் புலமை படைத்தவர்கள்..35 மார்க் எடுத்தால்தான் பாஸென்ற கொடுமையான சட்டம் நிலவி வந்த அந்தக்கால SSLC நான்..15 நாள் எங்களை அவரது வீட்டில் சிறை வைத்து சாப்பாடும் போட்டு பாடம் எடுத்து பாஸாக்கினார் கடமை கண்ணியம் மிக்க எனது ஆசான் திரு.ராஜ்குமார்.

வருடாவருடம் மீசை,கிருதா கெட்டப் சேஞ்ச் செய்வார் கமல் மாதிரி..

அப்பாடா...கமலை கொண்டு வந்துவிட்டேன்..கமலைப்பற்றி பேசுவது... நினைப்பது... சுகம்..

சென்னையில் நானும் விக்ரம் தர்மாவும் பக்கத்துவீடு..மருதநாயகம் பற்றி பேசும் போது சொன்னார் இந்தச்செய்தி.....மலை உச்சியில் இருந்து குதித்து தண்ணீருக்குள் மறைந்து போவதாகக்காட்சி..லொக்கேசன் ஒகனேக்கல்..வெள்ளம் பெருக்கெடுத்துக்கொட்டும் அருவி...ஒயர் கட்டி டம்மி வைத்து ஒத்திகை பார்த்தால்..... ஒரே ஒரு இடத்தில்.....மட்டும்...... சரியாக குதித்தால்..... மேலே இருந்து விழுகின்ற வேகத்தை..... உள் வாங்குகின்ற ஆழம் இருந்தது .மற்ற இடத்தில் விழுந்தால் தண்ணீருக்குள் ஒளிந்திருக்கும் பாறையில் மோதி மரணம் நிச்சயம்.டூப்பும் ரெடி..12 காமிராவும் ரெடி..டேக்கிற்க்கு ரெடியாகும் போது.... கமல், நான் ரெடி ...டூப் வேண்டாம்..... என்றார்..மொத்த யூனிட்டும் நடுங்கிவிட்டது...யார் சொல்லியும் கேட்காமல் குதித்தேவிட்டார்..அது மட்டுமல்ல...விழும் வேகத்தில் சற்று ஸ்விங் செய்து ஒரு பாறையில் காலை ஊன்றி மிதித்து....கரணம் போட்டு... சரியாக பள்ளத்தில் குதித்தார்..இன்றும் நம்மிடையே இருக்கிறார்..ஜாக்கிச்சான் கூட இந்த ஸ்டண்ட் செய்தது இல்லை..அனைத்து ஹாலிவுட் படத்துக்கும் இந்த ஒரு காட்சியில் சவால் விட்டிருந்தார்..எடிட் செய்து பார்த்தால் அத்தனை அழகு அந்தக்காட்சி.இந்தப்படம் வெளிவரவில்லையே என்று கலங்கினார் விக்ரம் தர்மா..

1991ம்வருடம்..... ஒரு ஹிந்திப்பட சூட்டிங்...விஜிபி கோல்டன் பீச்சில்..நான் எட்டி பார்த்தேன்.ஒரு ஜீப் பானட்டில் இருந்து குதிக்கும் காட்சி..குதித்தவர் டூப்..நடித்தவர் ரஜினிகாந்த்.

Sep 22, 2010

The divingbell and the butterfly-தன்னம்பிக்கையின் உச்சம்


பட்டர்ப்ளை என்ற பெயர் வந்தாலே பிரெஞ்ச் இயக்குனர்கள் கலக்கி விடுவார்கள் போல.....இப்படி ஒரு படத்தை எடுத்த இயக்குனர் Julian Schnabel க்கு முதலில் ஒரு பிரஞ்ச் கிஸ்.

விடாமுயற்ச்சியுடன்...தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதனின் உண்மைக்கதை.

42 வயதான Baubyக்கு தீடீரென்று ஸ்ட்ரோக் வந்து எல்லாமே செயல் இழந்து விடுகிறது....ஒன்றை தவிர....இடது கண் இமை மட்டும் துடிக்கிறது.இந்த நிலையில் தன்னுடைய சுயசரிதை எழுதி அதுதான் இந்தப்படம்..எப்படி எழுதினார்?????ஒரு நிமிசம் டைம் தருகிறேன்.கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் கலைஞரிடம் சொல்லி கலைமாமணி வாங்கி தருகிறேன்..மனிதமுயற்ச்சியின் உச்சத்தை தொட்டிருக்கிறார் இக்கதாநாயகன்..

மருத்துவ உதவியாளர் ஒவ்வொரு எழுத்தாகசொல்லிக்கொண்டு வரும்போது தேவையான எழுத்தில் இடது கண்ணை பிளிங்க் செய்வார்...இப்படி எழுத்துக்களை கோர்த்து வார்த்தைகளை உருவாக்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த முயற்ச்சி விவரிப்பதற்க்கே எனக்கு தலை சுற்றுகிறது.

அடிப்படையில் இந்த இயக்குனர் ஒரு ஒவியர்..எனவே படத்தையும் ஒவியமாக வரைந்து தள்ளிவிட்டார்..இக்கதாநாயகனின் நிலை வைத்து நம்மை பிழிய பிழிய அழ வைத்து இருக்கலாம்..மாறாக கதாநாயகனுக்கு வரும் காதல்,காமம்,கோபம்,பாசம்,வெறுப்பு என்று அனைத்தையும் நம் மீதேபடரவிட்டது இயக்குனரின் வெற்றி..

படத்தின் ஆரம்பக்காட்ச்சிகளில் காமிராதான் கதாநாயகன்..இக்காட்ச்சிகளின் நேர்த்திக்கு ஒளிப்பவாளருக்கு அனுஸ்க்காவை வைத்து ஒரு உம்மா...

இந்தப்படத்தை தேர்வுசெய்து எழுத காரணம் இருக்கிறது.மதுரையில் இருந்து வந்து படுத்து விட்டேன்.பத்து நாள் பேதி.. எல்லாபார்ட்சும் தகறாறு பண்ணுகிறது.மனைவி டிவி,இண்டர்னெட்,ரீடிங் எல்லாவற்றுக்கும் தடை போட்டுவிட்டாள்..காஸ்ட் அவே பட டாம்ஹேங்க்ஸ் போல ஆகிவிட்டேன்..இன்னும் உபாதைகள் தீரவில்லை.கொஞ்சம் தெம்பு வந்ததும் முதல் முயற்ச்சியாக இப்படத்தை எழுதிவிட்டேன்...சற்று சிரமப்பட்டு...

ஆனால் எந்திரனுக்கு வரும் அதீத விளம்பரங்கள்,செய்திகள்,பில்டப்புகள் தரும் மரண அவஸ்தைக்கு மற்றதெல்லாம் ஜுஜுபி......
இந்தப்பதிவை என் இனிய மருத்துவர் டாக்டர் மனோகரனுக்கு காணிக்கையாக்குகிறேன்

Sep 15, 2010

மதுரை புத்தக்திருவிழா&கமல்

சிறுஇடைவெளிக்கு காரணம் மதுரை புத்தகதிருவிழா.
உலகசினிமாவுக்காக முதன்முறையாக எனக்கு ஸ்டால் தந்தார்கள்.
சற்று அலட்ச்சியமாகத்தான் சென்றேன்...
சால்ட் 30டிவிடி : பதேர்பஞ்சலி 5டிவிடி என்ற விகிதத்தில்.
மதுரை மக்கள் ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டார்கள்.
விற்றது சால்ட் 10 பதேர்பஞ்சலி 50.

மதுரையிலிருந்து 20 கிலோமீட்டர் தள்ளி ஒரு விவசாயி வந்தார்.
எங்கே புனுவல்?எங்கே தியோஎஞ்சலோபோலிச்?என்று என்னை மிரட்டிவிட்டார்.
என் ஸ்டாலுக்கு எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஸ்ணன்,ஜெயமோகன்,கலாப்ரியா,முத்துகிருஸ்ணன் ஆகியோர்வந்து வாங்கினார்கள்.
உலகசினிமா விற்பனை அபாரம்.
நன்றி மதுரை.....


இடைப்பட்டநாளில் கமல் பற்றி ஒரு உலகமகா யுத்தமே நடந்திருக்கிறது.
காட்பாதர்தான் தேவர்மகன்.
ஆனால் தரத்தில் காட்பாதருக்கு இணையானது.

அன்பேசிவத்தில் ஒரிஜினலை மிஞ்சியிருந்தார்.
ஒரிஜினலுக்கு ஏன் கிரிடிட் தரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு...
என் பதில் காப்பிரைட்தான் காரணம்.
ராயல்டி கொடுத்து மாளாது.
தமிழ்நாட்டையே எழுதிகேட்பார்கள் ஹாலிவுட் வியாபாரிகள்.

நூறாவது படமாக ராஜபார்வை எடுத்து ஹாமாம் வாங்க காசில்லாமல் தவித்தது சத்தியம்.
அவர் மட்டும் நடிக்காமல் இயக்கினால் அந்தப்படம் தமிழ்நாட்டுக்கு ஆஸ்கார்,கேன்ஸ் என்றுஅள்ளிக்கொண்டு வந்துவிடும்.

நடிப்புக்கு அவரது மெனக்கெடல் உலகில் எந்த நடிகனிடமும் கிடையாது.
உதாரணம் அபூர்வசகோதரர்கள்.
காலைமடக்கி இரும்புக்கம்பியால் கட்டி குள்ள அப்புவாக்கி நடித்து முடிந்தவுடன் சேரில் தூக்கி வைப்பார்கள்.
சூட்டிங் முடிந்து அனைவரும் சென்றுவிடுவார்கள்.
கமல் மட்டும் அசையாமல் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பார் ரத்தஓட்டம் சீராவதற்க்கு.
கமலது அவஸ்தை காணச்சகியாமல் ஆச்சிமனோரமா கதறியேவிட்டார்.

நான் கமலின் திரைஉலகவாழ்வை சகலகலாவல்லவர் என்ற பெயரில் ராஜ் டிவியில் 52 வாரம் தொடராக தயாரித்து வெளியிட்டேன்.
என் வாழ்க்கையின் வசந்த காலம் அது.