Aug 25, 2011

நாகேஷ்-மறக்க முடியாத கலைஞன்

கோவை புத்தகக்கண்காட்சி வெற்றிகரமாக நடந்தது.
புத்தக விற்பனையில் ஈரோடு,திருப்பூருக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
டாஸ்மாக் விற்பனையில் முதலிடமும்...புத்தக விற்பனையில் மூன்றாம் இடமும் பிடித்தது கோவைக்கு அவமானம்.
சிறப்பு பேச்சாளராக வந்த ஜெயமோகன் காலி நாற்காலிகளிடம் பேசியது மிகப்பெரிய அவமானம்.
அடுத்த ஆண்டாவது கோவை மக்கள் அவமானத்தை துடைப்பார்களா?


நாகேஷ் பற்றி எழுதுங்கள் என நண்பர் கொழந்த கேட்டு பல மாதம் ஆகிவிட்டது.
அவர் மறந்தே போயிருப்பார்.
ஆனால் நான் மறக்கவில்லை.

சிரித்து வாழ வேண்டும் என்ற தலைப்பில் நாகேசின் வாழ்க்கை அனுபவங்களை எஸ்.சந்திர மவுலி என்பவர் தொகுத்து வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
அதிலிருந்தும்....
நான் நண்பர்கள் வட்டாரத்தில் கேட்டறிந்தவற்றையும் இப்பதிவில் காணலாம்.

நாகேஷ் தமிழில் செய்த சாதனைகள் மற்ற நகைச்சுவை நடிகர்கள் நெருங்க முடியாதது.
நாகேஷ் கால்சீட் இருந்தால்தான் எம்ஜியார் கால்சீட் வாங்க முடியும்.
அந்தளவுக்கு கொடி கட்டி பறந்தார்.

நாகேஷ் தனது முதல் நாடகத்திலேயே மிகச்சிறந்த நடிப்புக்கான பரிசை பெற்றவர்.
“முதல் தடவையாக மேடை ஏறப்போகிறோம் என்கிற சந்தோசம்...
 ஒழுங்காக நடிக்க வேண்டுமே என்கிற பயம்...இப்படி ஒரு கலவையான உணர்வுடன் மேடையின் பக்கவாட்டில் காத்துக்கொண்டிருந்தேன்.

 ‘அடுத்த பேஷண்ட்’என்று டாக்டர் சொல்ல,காட்சி ஆரம்பித்தது.
 ‘சட்டென்று உள்ளே போ’என்று என்னை லேசாகத்தள்ளினார் டைரக்டர்.
‘டாக்டர் கூப்பிட்டவுடன் உள்ளே போவதற்க்கு நான் என்ன கம்பவுண்டரா சார்!
பேசண்ட்!
அதுவும் வயிற்று வலியால் துடிக்கிற பேசண்ட்!
 எப்படி என்னால்,கிடுகிடுவென்று நடந்து போக முடியும்?என்று லேசான குரலில் ஆனால் அழுத்தமாக பதில் சொல்லிவிட்டு,
 ‘டாக்டர்’ என்று வீரிட்டு அலறியபடி மேடைக்குள் நுழைந்தேன்.
தீடிரென்று இப்படி ஒரு வீரிடும் குரலை எதிர்பார்க்காத பார்வையாளர்கள்
சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தனர்.
நிஜமாகவே வயிற்று வலியால் துடிக்கிற நோயாளி போல் உடலை வளைத்து நெளித்து கைகளால் வயிற்றை பிடித்துக்கொண்டே போய் நடந்து,
டாக்டருக்கு பக்கத்தில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் போய் ஒரு வழியாக உட்கார்ந்தேன்.
என்ன உடம்புக்கு? என்று டாக்டர் கேட்க,
 நான் அதை சட்டையே பண்ணாமல்.வயிற்றை பிடித்துக்கொண்டே ‘அம்மா’ என்று துடித்தேன்.
 என் கையில் ஒரு சீட்டு இருந்தது.
அதை டாக்டரிடம் நீட்டினேன்.
அதை அவர் வாங்குவதற்க்கு தன் கையை கொண்டு வந்த போது,
சட்டென்று என் கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டு,உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி,
ம்மா... ஆஆஆ...என்றேன்.
மறுபடி சீட்டை கொடுக்க நீட்டினேன்.
டாக்டர் வாங்க வரும்போது,கையை பின்னால் இழுத்துக்கொண்டு அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா.....என்று கத்தினேன்.
ஒன்றரை நிமிடங்களுக்கு...விதவிதமான ஏற்ற இறக்கங்களை குரலில் கொண்டு வந்து அம்மா என்றலறி;துடித்து கதறினேன்...
யாரடா இவன்!தீடிரென்று வந்து இப்படி அமர்க்களப்படுதுகிறானே!என்று பார்வையாளர்களுக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்!
கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

முதல் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்து கொண்டிருந்த செக்கச்சிவந்த மனிதர் கை தட்டி என் நடிப்பை மிகவும் ரசித்ததை பார்த்தேன்.
அவர்தான் தலைமை விருந்தினர்.
நாடகம் முடிந்ததும் மைக்கை பிடித்த அவர்,
நாடகம் நன்றாக இருந்தது.ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து,
ந்ம் அனைவரையும் கவ்ர்ந்து விட்டார்அந்த தீக்குச்சி மனிதர்.
அவருக்குத்தான் முதல் பரிசு...
என பரிசு கோப்பையை வழங்கினார்.

அன்று என்னை பாராட்டி பரிசளித்த விஐபி யார் தெரியுமா?
மக்கள் திலகம் எம்ஜியார்.

நேற்றும் இன்றும் நாளையும் சிரிப்பை வாரி வழங்கும்
காதலிக்க நேரமில்லை....
பாலையாவுக்கு கதை சொல்லும் காட்சி...
 எப்படி எடுப்பது என்று இயக்குனர் ஸ்ரீதரும், சித்ராலயா கோபுவும் பேசிக்கொண்டிருந்தனர்.
காக்கா கிழவிகிட்ட வடையை திருடின கதையை வைத்துக்கொள்ள்லாமா?
என கோபு கேட்க,
 ஸ்ரீதர் நிராகரித்து,
 “கதை சொல்லணும்;ஆனா அது கதை போல இருக்கக்கூடாது”என்றார்.
“டைரக்டர் தாதா மிராஸி சீன் சொல்லுவாரே அது மாதிரியா”என்றார் கோபு.
ஐடியா பிரமாதம் எனப்பராட்டினார் ஸ்ரீதர்.
டைரக்டர் தாதாமிராஸி கதை சொல்கிற பாணியே தனிதான்.

ஹீரோ நடந்து வந்துகிட்டு இருக்காரு...
தட்...தட்...தட் சப்தம்,
தீடிரென்று மழை...
ஹீரோவுக்கு பயம்.
மனசு திக்...திக்...திக்..னு அடிச்சுக்குது.
ஊ....ஊ....ஊ...தீடிரென்று மரத்திலிருந்து சப்தம்.
ஒரு கணம் கதிகலங்கி போகிறார் ஹீரோ.
ஜல்...ஜல்...ஜல்...கொலுசு ஒசை.
இருட்டில் பயந்தபடி வருகிறார் ஹீரோயின்...
இந்த ரீதியில் பின்னணி இசையுடன் அவர் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போவார்.
அதன்படி நான் நடித்தக்காட்சிதான் இன்றும் மக்களால் பேசப்படுகிறது.

திருவிளையாடல் தருமி நாகேசின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.

"தருமி மேக்கப் போட்டு ரெடியாக இருந்தேன்.
சிவாஜி வரவில்லை .லேட்டாகும். என்றார்கள்.
சிவாஜி வரும் வரை சோலாவாக என்னை வச்சு கொஞ்சம் எடுக்கலாமே என்றேன் இயக்குனர் ஏ.பி.என்னிடம்.
அவர்,  “படத்தின் சீன் இது ..நீ உன் இஷ்டப்படி இம்ப்ரவைஸ் பண்ணீக்கோ” என முழு சுதந்திரம் கொடுத்தார்.
அந்த சமயம் செட்டில் இருவர், “சிவாஜி இப்போ வந்திடுவார்,
இல்ல..இல்ல..
வரமாட்டார்.லேட்டாகும்”
என தங்களுக்குள் பேசிகொண்டிருந்தது காதில் விழுந்தது.
அதையே துவக்கமாக எடுத்துக்கொண்டேன்.
வர மாட்டான்...வரமாட்டான்..
அவன் நிச்சயம் வர மாட்டான்.
எனக்குத்தெரியும்..அவன் வரமாட்டான்...
என புலம்பியபடி ஒரே ஷாட்டில் முடித்தேன்.
பிரமாதம்...ரொம்ப பிரமாதம் எனப்பாராட்டினார் ஏ.பி.என்.

சில நிமிடங்களில் பரமசிவனாக மேக்கப்போட்டபடி சிவாஜி கம்பீரமாக நுழைந்தார்.
இருவருக்கும் காட்சியை விளக்கினார் இயக்குனர்.
புலவரே...என்ன புலம்புகிறீர்?என்றார் சிவாஜி.
ம்...இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல...
பேசும் போது,ரொம்ப இலக்கணமா பேசு!
பாட்டெழுதும் போது கோட்டை விட்டுரு! என்றேன்.
சிவாஜி, “என்ன ஏபிஎன்...நாகேஷ் பேசுறது புதுசா இருக்கு?என்று கேட்க ,
“நீங்க பரமசிவன் சார்...
அவர் அன்றாடங்காச்சி புலவர்.
அவர் லெவல் அவ்வளவுதான்,
ஏதோ புலம்பட்டும்...விட்டுடுங்க”என்றார் ஏபிஎன்.

மொத்த சூட்டிங் முடிந்து டப்பிங் தியேட்டரில் சிவாஜி நான் நடித்த மொத்தக்காட்சியையும் பார்த்தார்.
 “மீண்டும் இந்த சீனைப்போடுங்க”எனச்சொல்லி மீண்டும் பார்த்தார் சிவாஜி.
எதற்க்காக இந்தக்காட்சியை பார்க்கணும் என சிவாஜி சொல்றார்!அவ்வளவுதான் இந்தக்காட்சி...
பிடிக்கவில்லை.....
தூக்கிவிடுங்கள் எனச்சொல்வாரோ என்ற பயத்தில்...துக்கத்தில் தொண்டை அடைத்தது.
சிவாஜி ஏ.பி.என்னை அழைத்து,
இந்த மாதிரி நடிப்பை நான் பார்த்தது இல்லை.
நாகேஷ் நடிப்பு ரொம்ப்ப்பிரமாதம்.
இந்தக்காட்சியில ஒரு அடி கூட கட் பண்ணிடாதீங்க...
எல்லோரும் பாராட்டுவாங்க..
அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்..
அவன் பொறுப்பில்லாத பயல்.
டப்பிங் கரெக்டா பேச வைங்க..
ஒழுங்கா பேசலன்னா வெளிய விடாதீங்க”என்றார்.
கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மிகவும் சந்தோசம்.
சிவாஜி மாபெரும் நடிகர் மட்டுமல்ல...மிகச்சிறந்த ரசிகர்...எனவும் புரிந்து கொண்டேன்.”

நாகேஷ் இப்புத்தகத்தில் நாம் திரையில் இன்றும் ரசிக்கும் அத்தனை காட்சிகளும் உருவான பின்னணியை கூறி அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.
ஸ்ரீதர்,பாலச்சந்தர்,
கிருஷ்ணன் -பஞ்சு,எஸ்.எஸ்.வாசன்,ஏவிஎம்,கண்னதாசன் போன்ற ஜாம்பவன்களுடன் நாகேசுக்கு ஏற்ப்பட்ட அனுபவத்தை சுவைபட கூறி உள்ளார்.
நாகேஷ் தமிழ் சினிமாவில் நிரப்ப முடியாத பக்கம்.


Aug 13, 2011

Honey-[Bal-Turkish]2010 தேனெடுத்தவன் மரணத்தை நக்கினான்.


                    அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்.
ஆகஸ்ட் 12 முதல் 21 வரை கோவை வ.வு.சி கைத்தறி கண்காட்சி மைதானத்தில் ‘புத்தகத்திருவிழா 2011’ நடைபெறுகிறது.
புத்தக விற்பனையில் சென்னை,ஈரோடு,மதுரை,திருப்பூர் முன்னணியில் இருக்கிறது.
 “இந்தமுறை கோவை விற்பனை சூப்பர்” என பதிப்பாளர்கள் மனம் குளிர செய்யுங்கள்...எனதருமை கோவை மக்களே!
அப்படியே ஸ்டால் நம்பர் 69 க்கு வாங்க...வாங்க...வாங்க...
உலக சினிமா டிவிடியோடு காத்திருக்கிறேன்.

கடந்த வாரம் கோவையில் கோணங்கள் பிலிம் சொசைட்டியில் ஹனி என்ற துருக்கி படம் போட்டார்கள்
.நான் எழுத நினைத்த அனைத்து உலக சினிமாக்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தில் வந்தமர்ந்து கொண்டது.

இப்படத்தை இயக்கியவர் ‘துருக்கி சத்யஜித்ரே’.Semih Kaplanoglu.

சத்யஜித்ரே ஒரு மனிதனின் வாழ்க்கையை மூன்றாகப்பிரித்து
குழந்தை பருவத்தை பதேர் பஞ்சலி...
மாணவப்பருவத்தை அபராஜிதா...
வாலிபப்பருவத்தை அபு சன்சார்...
என மூன்று திரைக்காவியங்கள் படைத்தார்.
 இவர் இந்த டிரையாலஜியை ரிவர்ஸ் பண்ணி எடுத்திருக்கிறார்.
எக்-2007
மில்க்-2008
 என வளர்ந்த பருவத்தை முதலில் எடுத்து விட்டு குழந்தைப்பருவத்தை ஹனி என்ற பெயரில் 2010 ல் படமாக்கி வெளியிட்டிருக்கிறார்.
இந்த மூன்று படங்கள் யூசுப் டிரையாலஜி என அழைக்கப்படுகிறது.

முதல் காட்சியே அடர்ந்த காட்டில்தான் ஆரம்பிக்கிறது.
ஒரு மிகப்பெரிய உயர்ந்த மரம்.
அதன் மீது கொக்கி இணைக்கப்பட்ட கயிரை வீசுகிறான் ஒருவன்.
வலுவான பிடிமானம் கிடைத்ததை உறுதி செய்து கொண்டு கயிற்றின் துணையோடு மரத்தின் மீது ஏறுகிறான்.

மரம் ஏறும் காட்சியின் காமிரா கோணங்கள் சொல்லி விட்டது இப்படம் உயர்ந்த ஜாதி உலகசினிமா.
சடாரென்று கிளை முறியும் சத்தம்.
அந்தரத்தில் தொங்குகிறான்.
கிளை மயிரிழையில் தொங்குகிறது.
கீழே மரணம் தொட்டு விடும் தூரம்.
அவனை அப்படியே அந்தரத்தில் விட்டு...பார்வையாளர்கள் பி.பி.யை எகிற விட்டு ஹனி என்று டைட்டில் போட ஆரம்பித்து விட்டார் இயக்குனர்.

இதன் பிறகு ஆறு வயசு யூசுப்பின் பார்வையில் நான் லீனியராக பயணிக்கிறது திரைப்படம்.
நான் லீனியர் வகைப்படங்களில் வந்த சிறந்த படங்களான பல்ப் பிக்சன்,
21 கிராம்ஸ்,அம்ரோஸ் பெரோஸ்,பேபல் வரிசையில் ஹனி படத்தை தைரியமாக சொல்லலாம்.
தமிழில் சிறந்த நான் லீனியர் படம் ஆரண்யகாண்டம்.
நான் லீனியர் வகையில் எடுக்கப்பட்ட சுமாரான படங்கள்...
ஆயுத எழுத்து,வானம்.

இப்படத்தின் மொத்த வசனங்களை போஸ்ட்கார்ட் சைஸ் பேப்பரில் மட்டுமே எழுதிய மகா கஞ்சனாக இருக்கிறார் இயக்குனர்.
ரெவின்யூ ஸ்டாம்பில் டயலாக் எழுதிய படங்களை போடப்போவதாக கோண்ங்கள் பிலிம் சொசைட்டியில் மிரட்டி வருகிறார்கள்.

யூசுப்பிற்க்கு திக்குவாய் பிரச்சனை உள்ளது.
படத்தில் அவன் யாரிடமும் பேசுவதில்லை.
பெற்ற தாயிடம் கூட!!!!!!!.

அவன் பேசுவது தந்தையிடம் மட்டுமே....
அதுவும் ரகசியமாக....கிசு கிசுப்பான குரலில்.
அப்போது மட்டும் அவன் திக்குவதே இல்லை!!!!!!!.


யூசுப் படிக்கும் பள்ளியில்சுப்ரீம் கோர்ட் உத்தரவிடாமலேயே சமச்சீர்கல்வி பாட புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
வகுப்பில் ஆசிரியர் ஒரு பாடத்தை சத்தமாக மாணவனை வாசிக்கச்சொல்கிறார்.
பிழையின்றி வாசிக்கும் மானவனுக்கு மெடல் அணிவித்து கவரவிக்கிறார்.
யூசுப்பை வாசிக்கச்சொல்லும் போது...அவன் திக்க்க்க்க்க்க்க்க்குகிறான்.

மற்ற மாணவர்கள் கேலியாக சிரிக்கின்றனர்.
ஆனால் யூசுப்பிற்க்கு அந்த மெடலை அடைவதே லட்சியம்.
இதை விசுவலாக எவ்வளவு அழ்காக விளக்குகிறார் இயக்குனர் கேமாராமேன் துணையோடு.

இப்படத்தின் ஒளிப்பதிவை சிறப்பாக சொல்லியே ஆக வேண்டும்.
 இயற்க்கை ஒளியிலேயே பதிவு செய்துள்ளார்.

லொக்கேசன் ஊட்டி மாதிரி பசுமைப்பிரதேசம்.
ஆனால் அந்தப்பிரதேசத்தின் அழுகுணர்ச்சியை சுத்தமாக ஒழித்து கட்டி விட்டு இருண்ட பிரதேசமாக காட்டியுள்ளார்.
அவரது காமிரா கோண்ங்கள் அந்தப்பிரதேச வாழ்வியல் நெருக்கடிகளை பிரதானப்படுத்துகின்றன.
காட்சிகளில் இந்தத்தன்மையை கொண்டு வர நிறைய மெனக்கெடுதல் வேண்டும்.
மலைப்பிரதேசங்களில் கடும் மழை பொழிவதற்க்கு முன் அந்தப்பிரதேசமே முழு இருட்டாகி நம்மை பயப்படுத்தும்.
இந்த மிக சொற்ப்ப கால இடைவெளியில் மட்டுமே இந்தக்காட்சிகளை படம் பிடித்து ...பார்வையாளனுக்கு கலக்கத்தையும்..பயத்தையும்...பதற்றத்தையும் ஏற்ப்படுத்துவதில் ஒளிப்பதிவாளரும் இயக்குனரும் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளனர்.

தயாரிப்பாளரின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இப்படி காத்திருந்து படமாக்க முடியாது.
நம்மூரில் வெகு சில இயக்குனர்களுக்கும், ஒளிப்பதிவாளருக்கும் மட்டுமே இச்சுதந்திரம் உள்ளது.
இந்த காமிராக்கவிஞனின் பெயர் Bans Ozbicer.

படத்தில் நான் மிகவும் ரசித்த காட்சி....
யூசுப்பிற்க்கு அம்மா தம்ளரில் பால் கொண்டு வைப்பாள்.
யூசுப்பிற்க்கு பால் எப்பவுமே பிடிக்காது.
டைனிங் டேபிளில் திருதிருன்னு முழுச்சிகிட்டு இருப்பான்.
அப்பா டக்கென்று பாலைக்குடித்து யூசுப்பின் வயிற்றில் பால் வார்ப்பார்.
மகனுக்கு ஆப்பிளை வெட்டி கொடுப்பார்.

இதே காட்சி திரும்ப வருகிறது.
அப்பா பொழப்புக்காக வெளியூர் போயிருக்கிறார்.
அம்மா டைனிங் டேபிளில் பாலை வைக்கிறார்.
யூசுப் அம்மா பார்க்காத போது டக்கென்று தலையில் ஒரு முடியை பிடிங்கி பாலில் போட்டு விடுகிறான்.
அம்மா: என்ன இன்னும் பாலை குடிக்கல?
யூசுப் பாலை காட்டுகிறான்.
அம்மா: அடடா...பால் வேஸ்டா போச்சே!
இக்காட்சி நகைச்சுவை பாப் கார்ன்.

இதே காட்சி மீண்டும் வருகிறது.
அப்பா வெளியூரில் விபத்தில் மரணமடைந்து விட்டதாக வதந்தி மட்டும் வந்து சேருகிறது.
டைனிங் டேபிளில் அம்மா உட்கார்ந்து அழுது கொண்டிருப்பாள்.
பக்கத்தில் பால் டம்ளர்.
யூசுப் பால் டம்ளரையும் அம்மாவையும் மாறி மாறி பார்ப்பான்.
டக்கென்று பாலை மடக்... மடக்கென்று குடித்து விட்டு அம்மாவை பார்ப்பான்... ஒரு பார்வை...
அய்யோ...சாமி....
என் உடலில் உள்ள நாடி நரம்பு அனைத்தும் அழ ஆரம்பித்து விட்டது.
வசனமே இல்லாத சோக கவிதை.

இந்த யூசுப் வருங்காலத்தில் நமது இயக்குனர் விஜய் போல் வருவான் என தெரிகிறது.
வகுப்பில் ஹோம் ஒர்க் நோட்டை வாத்தியார் செக் பண்ணிக்கொண்டு வரும் போது பக்கத்து சீட் பையன் நோட்டை காண்பித்து வெரிகுட் வாங்கிவிடுகிறன்.
விஜய் ஐ யாம் சாம் படத்தை காப்பியடிச்சு....
 தெய்வத்திருமகள் எடுத்து தமிழர்களிடம் பெரும் புகழையும் பணத்தையும் பார்த்து விட்டார்!!!
இப்ப சொல்லுங்க....விஜய்யும் யூசுப்பும் ஸேம் பிளட்தானே! 

Aug 7, 2011

The Sicilian Girl-2001[Italy] பழிக்கு பழி


ரோட்டில் அரிவாளை தூக்கி கொண்டு துரத்துகிறது ஒரு கூட்டம்.
உயிரை காப்பாற்ற புயல் வேகத்தில் ஒடி வருகிறான்.
ஜெட் வேகத்தில் ஒருவன் பறந்து வந்து அனைவரையும் சிதறடிக்கிறான்.
ஹரி படங்களில் மட்டுமே தொடர்ந்து நாம் பார்க்கும் காட்சி இது.
அட...தடுக்க வேண்டாம்.
நடந்த கொலையை பார்த்தும் சாட்சி சொல்ல தயாரில்லாத தொடை நடுங்கி கூட்டம்தான் உலகத்தில் அதிகம்.
நானும் இந்தக்கூட்டத்தில் உறுப்பினன்தான் என்பதை வெட்கத்துடன் கூறிக்கொள்கிறேன்.
இப்படி பயந்து வாழும் வாழ்க்கை சிஸ்டத்தின் மீதே காறி உமிழ்கிறாள் இப்படத்தின் நாயகி.

ரீட்டா ஆட்ரியா மாபியா குடும்பத்தில் பிறந்து மாபியா கும்பலை ஒழிக்க தன்னுயிரையே தந்த வீரப்பெண்மணி.
இத்தாலியிலேயே சிசிலி பகுதி மாபியாக்கள்தான் உலகப்பிரசித்தம்.
1974ல் பிறந்து 1992ல் மறைந்த ரீட்டா இன்றும் வீர மங்கையாக இத்தாலியில் போற்றப்படுகிறார்.
                                  ஒரிஜினல் ரீட்டா அட்ரியா புகைப்படம்

ரீட்டாவின் வாழ்க்கை வரலாற்றை அழகான ஒவியமாக்கி நம்மை மயக்கியவர் இயக்குனர் Marco Amenta

உண்மை சம்பவத்தை படமாக்கும் போது...
பொதுவாக திரைப்படங்களில்...
ஆமைத்தன்மை வந்து விடும்.
இந்தப்பட்ம் விதி விலக்கு.
இயக்குனரின் திறமையால் இப்படம் ஹாலிவுட் திரைப்படம் போல் பறக்கிறது.

வன்முறையை வாழ்க்கையாக கொண்ட சிசிலி தீவில்...
அழகிய சிற்றூரில் பிறந்து....
 தந்தையால் வளர்க்கப்படுகிறாள் ரீட்டா.
தந்தை அந்த ஏரியாவுக்கே மார்லன் பிராண்டோ.
தாய் சொல்லை தட்டி... தந்தையோடு பயணப்பட்டு அவரது கரங்களின் வழியாகத்தான் இந்த உலகை காண்கிறாள் ரீட்டா.

ஊரின் நன்மைக்காக ஒரு கொடியவனை தந்தை போட்டுத்தள்ளுகிறார்.
விசாரிக்க வந்த நீதிமானுக்கு, ஊர்மக்கள்.... மவுனத்தை ஆகச்சிறந்த பதிலாக தருகிறார்கள்.
அவர் மேல் சாணி அடித்து ரீட்டா அவரை எச்சரிக்கிறாள்.
சின்னஞ்சிறு குழந்தையின் வாயில் வரும் வார்த்தைகள்....
அப்பப்பா...படத்தில் வரும் பவர்புஃல் காட்சி இது.

வல்லவன் நல்லவனாக இருப்பதில் உள்ள ஆபத்து...
 ரீட்டாவின் 11 வயதில் அவளது தந்தைக்கு நேரிடுகிறது.
ரத்த வெள்ளத்தில் துடிக்கும் தந்தையை காப்பாற்ற கதறும் போது
அத்தனை கதவுகளும் சாத்திக்கொள்கின்றன.

தந்தையின் சாவுக்கு பழிக்குப்பழி..ரத்ததுக்கு ரத்தம் ...என்றே வாழ்கிறாள்.
ஊரில் ந்டக்கும் அத்தனை அட்டூழியங்களையும் தனது டைரியில் தேதி வாரியாக பதிவு செய்கிறாள்.
17வது வயதில் தனது சகோதரனையும் அதே கும்பலிடம் பறி கொடுக்கிறாள்.
நரசிம்ம அவதாரம் எடுத்தால் சாவதற்க்கு எதிரி இரண்யன் இல்லை என்பதை உணர்ந்து நீதிமானிடம் அடைக்கலம் அடைகிறாள்.


தன் மீது சாணி அடித்த கைக்கு கை கொடுக்கிறார் நீதிமான்.
அத்தனை தாதாக்களையும் ,அவர்களுக்கு துணை போன அரசியல்வாதிகளையும் சேர்த்து உள்ளே தள்ளுகிறார்.
2 ஜியில் திகார் ஜெயில் நிரம்புவது போல் இத்தாலி சிறைகள் அத்தனையும் ஹவுஸ்புல்.
தாதாக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் உள்ள ராம்ஜெத்மலானிக்களும் கபில்சிபல்களும் நீதிமன்றத்தில் திரள்கின்றனர்.
ஜாம்பவன்களின் வாதத்தை சத்தியம் என்னும் பழைய ஆயுதத்தால் அடித்து நொறுக்குகிறாள் ரீட்டா.

நீதி தேவதையே ரீட்டா வடிவெடுத்து பிறந்து விட்டாள் என்ற பூரிப்பில் அவளை கட்டி அணைக்கிறார்.அது அவளது தந்தையின் அரவணைப்பல்லவா!!!

இறுதியாக நீதிமானை காரில் பாம் வைத்து கொல்கின்றனர் மாபியாக்கள்.
இதற்க்கு பதிலடியாக ரீட்டா தனது தற்கொலையின் மூலம் அத்தனை மாபியாக்களுக்கும் தண்டனை வழங்குகிறாள்.
எப்படி???!!! எனத்தெரிய ஆவலாயிருக்கிறதா?
சிம்பிள்...படம் பாருங்கள்.

இந்தப்படத்தை பெண் பதிவர்கள் பார்த்து..... தங்கள் பார்வையில்
இப்படத்தை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
டிவிடி கிடைக்கவில்லையென்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்...
நீங்கள் உலகின் எந்தப்பகுதியில் வசித்தாலும் எனது செலவில் அனுப்பவதை பாக்கியமாக கருதுவேன்.

விருதுகள் பட்டியல்[நன்றி:IMDB]

Bastia Italian Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2010WonAudience AwardMarco Amenta
Youth Jury PrizeMarco Amenta
NominatedGrand Jury PrizeMarco Amenta
David di Donatello Awards
YearResultAwardCategory/Recipient(s)
2009NominatedDavidBest New Director (Migliore Regista Esordiente)
Marco Amenta
David of the YouthMarco Amenta
Italian National Syndicate of Film Journalists
YearResultAwardCategory/Recipient(s)
2009NominatedSilver RibbonBest New Director (Migliore Regista Esordiente)
Marco Amenta



Aug 2, 2011

DEPARTURES-Japan[2008]இவன்தான் கலைஞன்.


காட்பாதர் பீவரில் இருந்து விலக ஒரு நல்ல படத்தை தேடினேன்.
இதோ நான் இருக்கிறேன் என்று முதல் ஆளாக வந்தது டிபார்ச்சர்ஸ்.
கோணங்கள் பிலிம் சொசைட்டியில் திரையிட்டபோது முதன் முதலாக பார்த்தேன்.
பதிவெழுத இரண்டாம் முறை பார்க்கும் போது இப்படம் இன்னும் அதிகமாக வசீகரித்தது.
என்னுள் இருந்த காட்பாதரை கரைத்துவிட்டது இப்படம் என்றால்... இது மிகை இல்லை.

இந்த ஜப்பான்காரனுங்க ரொம்ப மோசம்.
அந்த காலத்துல ஓசூ,குரோசுவா,கோபயாஷின்னு பெரிய பெரிய ஆளுங்க நல்ல நல்ல படம் எடுத்தாங்க.
அந்த பாதையிலதான் பயணிப்போம்ன்னு இந்த தலைமுறை இயக்குனர்களும் புறப்பட்டா எப்படி?
ஜப்பான் முன்னோடிகளின் நேரடி வாரிசாக உதித்துள்ளார் Yojro Takita.

இப்படத்தின் நாயகன் செலோ என்ற வயலின் வகை வாத்தியத்தில்
வைத்தியநாதன்.

இவன் வாசிக்கும் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கூட்டம் வராததால் குழுவை கலைத்து விடுகிறார்.[கூட்டம் எல்லாம் முத்து படம் பாக்க போயிருச்சா?]

வேலை இல்லாத கொடுமையால் சொந்த ஊருக்கே திரும்பி வருகிறான்.
சொந்த ஊரில் இவனுக்கு கிடைக்கும் வேலை...???
உங்களுக்கு ஒரு சவால்....
உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள்.
என்ன வேலையாக இருக்கும் என்று யோசியுங்கள்.
ரூம் போட்டு யோசித்தாலும் நம்மால் கண்டு பிடிக்க முடியாது.
இவனுக்கு கிடைத்த புதிய வேலை ...மேக்கப் போடுவது.
இது என்ன பெரிய வேலை...?
இதற்க்கா இவ்வளவு பில்டப்புன்னு அடிக்க வாராதீங்க சாமிகளா....

இவன் மேக்கப் போடுவது பிணங்களுக்கு....!!!

உயிரற்ற முகத்தை ஒவியமாக்குகிறார்கள் ஜப்பானியர்கள்.
கலையின் உச்சமாக எனக்கு தெரிந்தது.
ஒரு தாய் தனது குழந்தையை குளிக்க வைத்து.... தலை துவட்டி....பவுடர் பூசி.... பொட்டிட்டு... கொஞ்சுவாளே ...அதே நேர்த்தி இவர்கள் செய்யும் பணியில் இருக்கிறது.
சவக்களையை போக்கி உயிர் கொடுக்கும் கலையில் இவர்கள் மாமன்னர்கள்.

நம்மூர்ல கல்யாண வீட்டுல நம்ம பொண்ணுங்களை மேக்கப் போட்டு பொணமாக்குறாங்க.

மரண பயத்தை மரணிக்க வைக்கிறது இக்கலை.
மரணத்தை நேசிக்க ...எதிர் கொள்ள நம்மை தயார் படுத்துகிறது .

மேலை நாடுகளில் இருந்து கண்ட கருமாந்திரங்களை காப்பியடிக்கிறோம்.
இக்கலையை காப்பியடிக்கலாம் தப்பில்லை.

ஒரு படத்தின் அத்தனை தொழில் நுட்பங்களும் என்னை மயக்கியது...
கிம் கி டுக்கின் ஸ்பிரிங் ...சம்மர்...ஃபால்ஸ்...விண்டர்.
அதற்க்குப்பிறகு இந்தப்படம்தான்.

இப்படத்தை பார்த்து ஆஸ்கார் மட்டுமல்ல...உலகமே பேச்சு மூச்சில்லாமல் விருதுகளை வாரி வழங்கிவிட்டது.