Jun 29, 2012

Hey Ram-கூடல் வரும் பின்னே... [2000\ஹேராம்=013]


ஹேராமில் இந்தப்பகுதி எல்லோருக்கும் பிடித்த பகுதி.
அதற்கு காரணம்...காதல்&காமம்.
ஆனால் உளவியல் ரீதியாக... இக்காட்சியை நாம் விரும்புவதற்கு காரணம் காட்சியின் எளிமை.
ஆனால் உண்மையில்... இக்காட்சி அத்தனை எளிதாக அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பி பார்த்தோமானால்...இல்லையென்றே விடை கிடைக்கிறது.                                                                                                                                                 

பியானோவில் ராம் அபர்னாவை சாய்த்து முத்தமிடும் போது...
அக்காட்சி ஒளிப்பதிவில் தகத்தகாயமாக ஜொலிக்கும்.
இக்காட்சியில் ஒளிப்பதிவாளர் திருவும்,இசையமைப்பாளர் இளையராஜாவும் கமலோடு கை கோர்த்து காவியத்தன்மையை அதிகப்படுத்தி உள்ளார்கள்.  “இந்தக்காதல் தெய்வீகமானது” என இளையராஜா இசையால் சொல்லும்போது அதற்கு அப்பீல் இருக்க முடியுமா என்ன?
இதற்கு நேர் எதிர்மறையான ராம்-மைதிலி எந்திர மயமான காதலை பின்னால் பார்ப்போம்.

பியானோவில் வாசித்த ட்யூனை வாயில் ஹம் பண்ணியபடி வராந்தாவில் படுக்கையை விரித்து ராம் கீழே படுக்கிறான்.
அபர்னா அவன் மேல் அமர்கிறாள்.
அவள்தான் ராம் சட்டையை கழட்டுகிறாள்.
அபர்னாவின் காரெக்டர் தன்மை... ரசிகர்களிடம் வெகு எளிதாக கடத்தப்படுகிறது.

இந்தக்காட்சியை படமாக்கும் போது... இயக்குனர் கமல் ஷாட் வைத்திருக்கும் பாங்கை பார்ப்போம்.
ராம்-அபர்னா... கலவிக்கு தயாராகும் காட்சியை சற்று வெளியில் காமிராவை வைத்து டைரக்டர் பாய்ண்ட் ஆப் வியுவில் ஷாட் வைத்திருக்கிறார். குறுக்கும்... நெடுக்குமாக சட்டகங்கள் உள்ள பிரேம் வழியாக ஷாட் வைத்திருப்பார்.
இவர்களிருவரையும் பிரேம் பண்ணி விட்டார்கள் என்பதின் குறியீடாக தோன்றவில்லையா!
அந்த சட்டகங்கள் பச்சை வண்ணத்தில் பெயிண்ட் பண்ணியிருப்பது குறியீட்டீன் ஆழத்தை அகலப்படுத்துகிறது.
இங்கேயும் விக்டோரியா மஹாலை குறியீடாக்கி உள்ளார்.
அதிகாரவர்க்கம் ரணகளத்தை எதிர்பார்த்து அமைதியாக காத்திருக்கிறது. காதலர்கள் இதை அறியாமல் கிளுகிளுப்பாக இருந்தார்கள் என்பதே இக்குறியீட்டீன்... கோனார் தமிழ் உரை.  இன்னும் குறியீடுகள்... அடுத்தப்பதிவிற்காக காத்திருக்கின்றன.

இக்காட்சியின் காணொளி இங்கே...

Jun 25, 2012

பாலாஜி சக்திவேலுக்கு பாராட்டு...விஜய்க்கு திட்டு...


பாலாஜி சக்திவேலுக்கு... கோவையில் பாராட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை  நிறைவாக நடந்தது.
அன்றே வழக்கு எண்ணை... சகுனி தியேட்டரை விட்டு விரட்டியதும் நடந்தது.

கவிஞர் தட்சிணாமூர்த்தியும், அவரது சகோதரரும்... இரண்டே இரண்டு பேர்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்திருந்தனர்.
கோவை போலிஸ் மிகச்சிறப்பாக அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கியது குறிப்பிடத்தக்கது.
பேனர் வைக்கவிடவில்லை.
ஆட்டோவில் விளம்பரம் செய்ய விடவில்லை.
இது போன்ற செலவினங்களை செய்ய விடாமல் பாதுகாத்தனர்.
சகோதரர்கள் சளைக்கவில்லை.
இரண்டு நாள் கண் முழித்து இரவோடு இரவாக போஸ்டரை அவர்களே ஒட்டி தள்ளி விட்டனர்.
நான் அணில் மாதிரி என்னால் முடிந்ததை செய்தேன்.
எனது நண்பர் ஹலோ எப்.எம் பிரபு மூலமாக பாலாஜி சக்திவேல் பேட்டியும்... அதன் அறிவிப்புமாக ஹலோ எப்.எம் அலறியதில்... கொஞ்சம் நேயர்களை அழைத்து வந்தது.
ஒரு வழியாக... ஒரு டீசண்ட் கிரவுட் வந்து விட்டது.

எனது நண்பர் ஆனந்தன் அவர்கள்... முதலில் பேசினார்.
அவரது பேச்சுகளில்... இது மிகச்சிறந்த ஒன்றாக அமைந்தது.
உலகின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராபர்ட் பிரஸ்ஸானின் Money என்ற திரைப்படத்தின் தரத்தில்...தளத்தில்... இப்படம் இருந்ததை குறிப்பிட்டார்.
இடைவேளைக்குப்பிறகு... ஹிட்ச்ஹாக் பாணியில்... திரில்லர் பண்ணியிருப்பதாக சிலாகித்தார்.
மாமேதை மார்க்சின்...
மனித உறவுகள்...பண உறவுகளகி விட்டன...
புனிதங்கள்... புனிதங்களை இழக்கின்றன...என்ற தத்துவ வரிகளில் மொத்த திரைப்படம் இயங்குவதை விவரித்தார்.
'உங்களுக்கு புகழ் சூட்டுவதோடு ...பொறுப்பையும் தருகிறோம்...
இன்னும் இது போன்ற 25 படங்களை கோவை மக்கள் எதிர்பார்க்கிறோம்.'...
என முடித்தார்.

தொடர்ந்து நண்பர் ஒவியர் ஜீவா பேசினார்.
ஷ்யாம் பெனகல்,மகேந்திரன் படங்களோடு வழக்கு எண்ணை ஒப்பிட்டு பேசினார்.

எழுத்தாளர் பாமரன் அவருக்கே உரிய எள்ளல் நடையோடு பாராட்டியும்....நிறைய பேரை திட்டியும் பேசினார்.
இயக்குனர் விஜயை... ஐ யாம் சாமை... தெய்வத்திருமகளாக... ஜெராக்ஸ் எடுத்தற்கு திட்டி தீர்த்து விட்டார்.
ரோஸி என பெயரிட்டு பாலியல் தொழிலாளியை... வழக்கு என்ணில் காட்டப்பட்டதற்க்கு பாலாஜி சக்திவேலையும் கண்டித்தார்.
ஒரு சிறுபான்மை இனத்தை தொடர்ந்து பாலியல் தொழிலாளியாக
தமிழ் திரையுலகம் சித்தரிக்கும் அவலத்தை சாடினார்.

சென்னை புத்தகக்கண்காட்சியில் உலகசினிமா ஸ்டாலை தூக்க கோடம்பாக்கம் முயற்சி செய்ததை குறிப்பிட்டு பேசினார்.
நிகழ்ச்சி முடிந்ததும்... நான்தான் ஸ்டால் போட்ட ஆசாமி...
என அறிமுகம் செய்து கொண்டதும்...
அட...தோழர்...நீங்களா என ஆச்சரியப்பட்டு...
ஸ்டாலில் கிகுஜிரோவையும்...ஐ யாம் சாமையும் நீங்கள் அடுக்கி வைத்திருந்தால் கோடம்பாக்க ஆசாமிகளுக்கு பொறுக்குமா?
அதான் உங்களை தூக்கிட்டானுங்க...என உண்மையை போட்டுடைத்தார்.

வழக்கறிஞர் பிரபாகரன்... இப்படத்தின் டிவிடியை கொடுங்கள் வீடு..வீடாக கொண்டு சேர்க்கிறேன் என உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
தொடர்ந்து பேராசிரியர் திலிப்குமார்,இயக்குனர்கள் ஸ்டேன்லி,சசி பேசினார்கள்.

ஏற்புரையாக பாலாஜி சக்திவேல் பேசினார்.
இந்த பாராட்டு அனைத்தும் இனிப்பு மாதிரி எடுத்துக்கொள்கிறேன்.
ஆனந்தன் சார் சொன்னது மட்டும்... மருந்து மாதிரி உள்ளுக்குள் என்றும் இருக்கும்.
சங்கர்,லிங்குசாமி போன்ற பட இயக்குனர்கள் உதவியோடு இது போன்ற மக்களுக்கான திரைப்படங்களை தொடர்ந்து தருவேன் என உறுதியளித்தார்.

நிகழ்ச்சியை இந்தியன் எக்ஸ்பிரஸ் துணை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் தொகுத்து வழங்கினார்.

சனிக்கிழமை பாலாஜி சக்திவேலை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சந்தித்து உரையாடினோம்.
தனது படங்கள் அவார்டை குறி வைத்து எடுக்கப்படுவதல்ல.
பத்து பேர் மட்டும் பார்த்து... பாராட்டு பெறுவதில் தனக்கு விருப்பமில்லை.
மசாலா படம் பார்ப்பவரை... என் பக்கம் திருப்புவதே தனது நோக்கம்.
தரமான விஷயங்களை... எளிமையாக சொல்வதில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்றார்.
இருபது லட்சத்தில் கூட நான் படமெடுப்பேன்.
அதற்கான கதை என்னிடம் இருக்கிறது... என நம்பிக்கை நட்சத்திரமாக பேசியது இன்னும் என் மனதில் ஒலித்து கொண்டிருக்கிறது.

எல்லோரும் குறையாகச்சொல்லும் கனவுக்காட்சியில் ஜோதியின் வீட்டில் லெனின் புத்தகம் காட்டப்பட்டது குறித்து விளக்கமளித்தார்.
தெரிந்தே அதைச்செய்தேன்.
அந்த ஒரு இடம் விட்டால் எனக்கு படத்தில் வேறு இடமேயில்லை.
அஸிஸ்டெண்டுகளிடம் இது குறித்து பல முறை விவாதித்து துணிந்துதான் அந்தக்காட்சியை சொருகினேன் என்றார்.

நான் உடனே...சார் இது குறித்து நானும் ஆனந்தன் சாரும் டிஸ்கஸ் செய்துள்ளோம்....ஒரு படைப்பாளிக்கு அந்த சுதந்திரம் உண்டு என கை கொடுத்தேன்.
கனவுக்காட்சியில் பாரின் லொக்கேஷன் போக....
ரசிகர்கள் யூரின் போக... இடமளிக்கும் இயக்குனர்கள் மத்தியில்...
லெனினை காட்ட நினைத்த பாலாஜி சக்திவேல் தனித்து நிற்கிறார்.

அவரை ஒய்வெடுக்க சொல்லி விட்டு நானும் நண்பர்கள் மட்டும் கொஞ்சநேரம் பேசினோம்..
இண்டலக்சுவல் எழுத்தாளர் என தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் எழுத்தாளர்கள்... இப்படத்தை குறை சொல்லி கும்மியடிப்பதை பற்றி பேசினோம்.
நண்பர் ஒருவர் அழகாக விளக்கமளித்தார்.
செல்போன் மூலமாக வக்கிரம் செய்வதை கண்டித்து பாலாஜி சக்திவேல் படமாக்கியுள்ளார்.
பேஸ் புக்கில் வக்கிர சிந்தனையோடு உரையாடிய எழுத்தாளன் இப்படத்தை தூக்கி மிதிக்காமல் என்ன செய்வான்? என கேள்வி எழுப்பினார்.
இந்தக்கேள்வியில் நியாயம் இருக்கிறதா...நண்பர்களே?  

Jun 19, 2012

Hey Ram-ஊடல் வரும் முன்னே... [2000\ஹேராம்=012]


அரேஞ்ச்டு மேரேஜ் மனைவியை விட... காதல் மனைவி சம்திங் ஸ்பெஷலாகத்தான் இருப்பார்கள்.
அவர்களுக்குள் இருக்கும் காதலில் கட்டாயம் தெய்வீகம் வந்து விடும்.
அதே போல் அவர்களுக்குள் இருக்கும் காதலும்...காமமும்...பவர்புல்லாக இருக்குமாம்.
அதுவும் ஊடலுக்கு பின் வரும் கூடல் இருக்கிறதே...
அதற்க்கு இரவு...பகல்,பெட்ரூம்-வரண்டா எதுவும் தெரியாது.

இங்கே ஊடலுக்கு காரணமாக தந்தியை வைத்து விட்டார் கமல்.
                                           திரைக்கதையிலிருந்து
அபர்னா : உங்கப்பாகிட்டேர்ந்து தந்தி வந்திருக்கு.

ராம் தந்தியைப்பற்றிய கவலையில்லாமல்,துப்பாக்கியை கையிலெடுத்து,அதில் தோட்டா இருக்கிறதா என்று பார்க்கிறான்.
ராம் : ஹா...ஹா...
[சிரிக்கிறான்]


அபர்னா : படிச்சு...
[ராமின் கவனம் தன் பேச்சில் இல்லாதது உணர்ந்து நிறுத்தி விடுகிறாள்]


ராம் : காலித்துப்பாக்கி...காலணாவுக்கு பிரயோஜனமில்ல...
இதை விட சமயக்கரண்டியே தேவலை.
புல்லட்ஸ் எங்கே?


அபர்னா : பீரோவில் இருக்கு...


ராம் : வெரி க்ளவர்....
துப்பாக்கியை சோபாவில் வைத்து அதிருப்தியாக தலையை அசைக்கிறான்.


அபர்னா :[தந்தியைக்காட்டி] தந்தி...


ராம் : அதான் படிச்சிருப்பியே....
என்னன்னு சொல்லு.


அபர்னா : டெலகிராம்ங்கறதுனாலே படிச்சேன்.
ஐ யாம் ஸாரி


ராம் : டோண்ட் பி ஸ்டுப்பிட்.
என்ன பாதர் ஸீரியஸ்...அவ்வளவுதானே?


அபர்னா : திஸ் ஈஸ் மோர் சீரியஸ்.
[தந்தியை எடுத்து அவன் கையில் திணிக்கிறாள்]
                                                             
ராம் : அய்யய்யோ வைகுண்டத்துக்கே போயிட்டாரா? 
                                                              *************************
இங்கே டயலாக்கின் மூலமாக துப்பாக்கியில் குண்டு இல்லை என எஸ்டாபிலிஷ் செய்கிறார்.
பின்னால் வரும் காட்சியில் துப்பாக்கியில் குண்டு இல்லாததை வைத்தே...
சாகேத்ராம் உயிர் பிழைக்கமுடிகிறது.
காலணாவுக்கு பிரயோஜனமில்லாத துப்பாக்கியை....உயிர் காக்கும் கருவியாக்கி முரண்சுவை [Irony] ஊட்டியிருப்பதை உணர முடிகிறது அல்லவா!
அதனால்தான்... இந்தக்காட்சியில் டயலாக்கின் மூலமாக...
நேரேட்டிவ் லிங்கேஜ் கொடுக்கிறார்.

அதே சமயத்தில் காலி துப்பாக்கியை வைத்திருந்த அபர்னாவை...
தந்தியை படித்ததற்காக மன்னிப்பு கேட்கும் உயர் நாகரீகம் படைத்தவராகவும் எஸ்டாபிலிஷ் செய்கிறார்.
ஆபத்து விளைவிப்பவர்களை கூட தாக்கும் எண்ணம் இல்லாத சாப்ட் நேச்சர் காரெக்டராக அபர்னா....
ஆபத்து விளைவித்தவர்களை பழி வாங்கும் காரெக்டராக சாகேத்ராம்....
ஆபத்து வந்தால் கூட துப்பாக்கிக்கு மார்பை காட்டும் குணவானாக அம்ஜத்தையும் படைத்ததில் முரண்சுவை இருக்கிறது.


என்ன பாதர் ஸீரீயஸ்...அவ்வளவுதானே?
என்ற ஒரு வரி டயலாக்கின் மூலமாக தகப்பன்-மகன் உறவை
போட்டுடைத்து....
அய்யய்யோ... வைகுண்டத்துக்கே போய்ட்டாரா?
என்ற டயலாக் டெலிவரி மூலம் நடிகர் கமல் தரும் அர்த்தமே அலாதி.
இங்கே...ரஷ்ய பார்மலிஸ்ட் மைக்கேல் பக்தின் சொல்வதை நினைவு கூறலாம்.
'எழுதப்பட்ட மொழியை விட...பேசப்படுகிற மொழியில் சக்தி அதிகமாக இயங்கும்' என்கிறார்.
பேசப்படும்போது... அதில் இருக்கும் எமோஷன் ஆயிரம் அர்த்தங்களை ஜெனரேட் செய்யும்.
அதை எழுத்தில் முழுமையாக கொண்டு வர முடியாது.

அதே சமயத்தில் எழுத்தில் இருக்கும் அடர்த்தியை...பேச்சில் கொண்டு வர முடியாத சூழலும் இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்க.

இந்தக்காட்சியை அடுத்த பதிவிலும் தொடருவோம்.  
இக்காட்சியின் காணொளி காண்க...

Jun 17, 2012

Hey Ram- தவறுகளின் குழந்தையே... துன்பம். [2000\ஹேராம்=011]


பண்டைய நாகரீகத்தின் மேன்மையை தோண்டி...ஆராய்ச்சி செய்து உலகுக்கு பறை சாற்றும் நாகரீக மனிதனான சாகேத்ராம்...நாகரீகமே இல்லாமல் காட்டுமிராண்டி போல் மனிதவேட்டைக்கு புறப்பட்டான் என்றால்...அதற்கான காரணம் எவ்வளவு வலுவானதாக இருக்க வேண்டும்!.
தன் காதல் மனைவியை பறி கொடுப்பதே அத்தகைய ஆக்ரோஷத்தை கிளப்ப முடியும்.
இது வரை சாகேத்ராமின் காதல் மனைவி ஆடியன்சுக்கு நேரடியாக காட்டப்படவில்லை.
ஆனால்... இருவரின் நெருக்கத்தையும்... பார்ட்டி சீனில் வசனங்களால் சொல்லி விட்டார் கமல்.
அம்ஜத் : ஹி ஈஸ் ஆல்ரெடி எ பொண்டாட்டிதாசன்.

போனில் பொண்டாட்டியிடம் குழைந்து குழைந்து பேசும்போது அந்த காதலின் நெருக்கத்தை நடிகர் கமல் எஸ்டாபிலிஷ் பண்ணியிருப்பார்.
காதல் இளவரசனாச்சே!
இன்று வரை அந்த சிம்மாசனத்தில் அவரே ஆட்சி புரிகிறார்.

இப்போது வரவிருக்கும் ஒரே ஒரு காட்சியிலேயே இவர்கள் காதலின் நெருக்கத்தை ஆடியன்சிடம் சொல்வதற்கு படைப்பாளி கமல் தீர்மானித்து விட்டார்.
படைப்பாளி,இயக்குனர்,நடிகர் மூவருமே தனித்தனியாக போட்டி போட்டு செயல் பட்டிருக்கிறார்கள்.
இந்த மூன்று டிபார்ட்மென்டை ஒருவரே கையாண்டு வெற்றி பெறுவது சாதாரணம் அன்று.
இத்தகைய ஆளுமையில் கமலுக்கு முன்னோடி..சார்லி சாப்ளின்.

சாகேத்ராம் காலிங் பெல்லை அழுத்தி விட்டு ஒளிந்து கொள்கிறான்.
காதல் மனைவி அபர்னா துப்பாக்கியை தூக்கி விடுகிறாள்.
கல்கத்தா சூழ்நிலை தெரிந்த பெண்ணாக அபர்னா சித்தரிக்கப்படுகிறாள்.
சூழ்நிலையை கணக்கில் எடுத்து கொள்ளாத காரெக்டராக சாகேத்ராம் சித்தரிக்கப்படுகிறான்.
இக்காட்சியை முழுக்க கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை புலப்படும்.
சூழ்நிலையை கவனிக்க தவறியதால் தான் டிராஜிடி நிகழ்கிறது.

அரிஸ்டாட்டில் பார்ம் முறைப்படி டிராஜிடியை வரவழைக்கும்...
ஒரு மெத்தடை... இப்போது பார்ப்போம்...
ஒரு காரெக்டர்... தான் அறிந்தும் அறியாமலும் செய்த...தனது தவறுகளின் மூலமாக ஏற்படும் டிராஜிடி...காரெக்டருக்கும்...அதே சமயத்தில் ரசிகனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அரிஸ்டாட்டில் பார்ம்....செல்ப் கான்சியஸ்னஸ்ஸை பெரும்பாலும் முன்னிலை படுத்துகிறது.
இதன் வடிவமைப்பு...தனி மனித உணர்வுகளுக்குள் விளையாடும் தன்மை இருக்கும்.
ஹாலிவுட் நேரேட்டிவ் ஸ்டைல் இப்படித்தான் பெரும்பாலும் இருக்கும்.

யூரோப்பியன் பார்ம்... சோஸியல் கான்சியஸ்னஸ்ஸை பெரும்பாலும் முன்னிலைபடுத்துகிறது.
இதன் வடிவமைப்பு அறிவுபூர்வமாக விளையாடும் தன்மை இருக்கும்.

விஸ்காண்டி,குரோசுவா,அண்டனியோனி,பெர்க்மன்,டிசிகா போன்ற மாஸ்டர்கள் இரண்டு பார்மையும் கலந்து தங்களது படைப்புகளை மேம்படுத்தி விடுவர்.
கமலும் இதே முறையை கையாண்டு ஹேராமை படைத்துள்ளார்.
ஹேராம் கதை... யூரோப்பியன் பார்மில் இருந்தாலும்...சாகேத்ராம்-அபர்னா காட்சியை அரிஸ்டாட்டில் பார்மில் கமல் வடிவமைத்துள்ளார் என்பதை மனதில் கொள்க.

அடுத்த பதிவில்...விலாவாரியாக பார்ப்போம்.

Jun 15, 2012

Hey Ram-மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன? [2000\ஹேராம்=010]


கல்கத்தா கலவரத்தின் விதையை தூவிய அதிகார வெள்ளை வர்க்கத்தின் மையம்... விக்டோரியா மெமோரியல்.
அதை சைலண்ட் ஷாட்டில் காட்டியிருப்பார் கமல்.
விக்டோரியா மெமோரியல்=கிழக்கிந்திய கம்பெனி+பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சாம்ராஜ்யம் ஆகியவைகளின் குறியீடு

இந்த புயலை உருவாக்கிய இடம் இதுதான்...இங்கேதான் இந்த வெள்ளையர்கள் அமைதியாக காய் நகர்த்தினர் என்று இதை கொள்ள வேண்டும்.
கல்கத்தா கலவரத்தில்... இந்து-முஸ்லீம் மட்டும் அல்ல...மறைந்திருந்து கலவரத்தை தூண்டிய வெள்ளையரையும் கொண்டு வந்து...
டிரை ஆங்கிள் பண்ணிய வித்தை புரியாத ஜந்துக்கள்...
நாலே... நாலு உலகசினிமாவை பார்த்து விட்டு தன்னை ஜாம்பவன்கள் என எண்ணிக்கொள்ளும் தவளைகள்
ஹேராமை தவறாக விமர்சிக்கின்றன.

இனி வரும் காட்சிகளில் நடிகர்,இயக்குனர்,படைப்பாளி என மூன்று ஸ்தானங்களில் தனது உச்சபட்ச ஆளுமையை கமல் நிரூபித்த காட்சிகள். கவனமாக பார்க்க வேண்டிய காட்சிகள் இவை.

கூர்க்காவிடம் லக்கேஜை பத்திரமாக வீட்டிற்க்கு கொண்டு வா எனச்சொல்லி விட்டு லிப்டுக்குள் நுழைவான் சாகேத்ராம்.
அப்போது முதிய தம்பதியினர் அவசரம்..அவசரமாக உள்ளே நுழைந்து லிப்டில் ஏறிக்கொள்வர்.
அவர்கள் கையிலும்..பையிலும் பழங்கள் வாங்கி வந்திருப்பதை விசுவலாக எஸ்டாபிலிஷ் செய்திருப்பார் இயக்குனர்.
தொடர்ந்த அவர்களது உரையாடலில் பந்த் குறித்த மத்திய தர வர்க்கத்து பார்வையினை உணர முடியும்.
அவர்கள் விடை பெற்றுச்செல்லும் போது...தவறி விழுந்த ஆரஞ்சை கமல் தூக்கி எறிய பெங்காலி முதியவர் காட்ச் பிடிப்பார்.
திரைக்கலையில் இது போன்று காட்சிஅமைப்பது நுவான்ஸ்[Nuance] என்றழைப்பார்கள்.
காட்சிகளில் இப்படி நுவான்சை நுழைப்பது கமலுக்கு மிகவும் பிடித்த விஷயம்.
பந்த் அன்றும் சில கடைகள் திறந்திருக்கின்றன...என்பதை வெளிப்படுத்த மட்டும் இக்காட்சி இல்லை என்பதை பின்னால் நாம் காணவிருக்கிறோம்.
சாகேத்ராமை புரட்டி போட்ட காட்சியை அடுத்த பதிவில் காண்போம்.



Jun 11, 2012

Hey Ram- கலவரத்தின் விதை [2000\ஹேராம்=009]


போன பதிவில் நான் ஒளித்து வைத்த குறியீடு...

ராமர்-பாபர் பிரச்சனை சமகால அரசியல் என்றே நிறைய பேர் கருதிக்கொண்டு இருக்கிறோம்...நான் உட்பட....

ஆனால் 1946ல் நடைபெற்ற பார்ட்டியில் பாடப்படும் பாடலில் ராமரையும் பாபரையும் மையப்படுத்தி வாலி எழுத கமல் படத்தில் வைத்திருக்கிறாரே! கருத்துப்பிழையோ என நினைத்து வரலாற்றை ஆய்வு செய்தேன்.
விக்கிப்பீடீயா விடையளித்தது.
http://en.wikipedia.org/wiki/Babri_Mosque
18ம் நூற்றாண்டிலேயே இப்பிரச்சனை கோர்ட்டு வரைக்கும் போயிருக்கிறது.
இந்த வரலாறு தெரிந்துதான் கமல் இப்பாடலை வடிவமைத்திருக்கிறார் என்பது என் மர மண்டையில் ஏறியது.

பாடல் முடிவடைந்ததும்... கராச்சியிலிருந்து கல்கத்தா என்ற கலவர பூமிக்கு பயணப்படுகிறது திரைக்கதை.
கேபிடல் வாட்ச் கம்பெனி [Capital Watch Co.]என்ற போர்டு டைட் குளோசப்பில் வரவேற்கிறது.
முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா...
எழுத்து வடிவத்திலும் செமியாட்டிக்ஸ் வேலை செய்யும் என்று....
இந்த போர்டுதான் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

இந்து-முஸ்லீம் கலவரத்தை தூண்டி விட்டு....விருப்பத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது வெள்ளைக்கார அரசு என்பதே இக்குறியீட்டின் விளக்கமாகிறது.
கேபிடல்=முதலாளித்துவ பிரிட்டிஷ் அரசு
வாட்ச்=பார்த்துக்கொண்டிருப்பது.
கம்பெனி=கிழக்கிந்திய கம்பெனி.
இந்தப்பெயரில்தான் இங்கிலாந்து பேரரசு இந்திய துணைக்கண்டத்தை ஆக்கிரமித்தது.

எய்தப்பட்ட அம்புகள் போல் இஸ்லாமியர்கள்... குழு மனப்பான்மையுடன்... ஆக்ரோஷத்தோடு அலைபாய்வதை... சாகேத் ராம் காரில் வரும் காட்சிகள் சித்தரிக்கின்றன.


இங்கேதான்...இஸ்லாமிய நல்லொழுக்கத்துக்கு பிரதிநிதியான அம்ஜத்துக்கு... நேர் எதிர்மறையான அல்தாப் அறிமுகமாகிறான்.
அவனது உரையாடல் மூலமாக அவன் சாகேத்ராமின் மனைவி மீது மோகத்துடனும்...வன்மத்துடனும் இருப்பதை உணரமுடிகிறது.
அவனது செயல்பாட்டில்....வஞ்சகத்தை நயமாக மூடி மறைக்கும் வித்தை இருப்பதை புரிய முடிகிறது.
காரின் மீது அழுகிய தக்காளி வீசப்படுகிறது.
சாகேத் ராமின் முன்னால்... வீசியவனை கடிந்து கொள்வது போல் நடிக்கிறான்.
காரின் பின்னால்... அவனே தக்காளியை அடிப்பான்.
அவனது உடல் மொழி,ரியாக்‌ஷன் அனைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்ற இஸ்லாமியர்களிலிருந்து வேறுபட்டிருப்பதை உணரலாம்.

ராம் : வாட்டீஸ் ஹாப்பனிங்?
டோண்ட் சீ த போலிஸ் எனி வேர்!


சர்தார்ஜி டிரைவர் : ட்டுடே இஸ் ஆகஸ்ட் 16th சர்....
போலீஸ் செலிபரேட்டிங் ஹாலி டே சர்....
அண்ட் அவர் பிரிமியர் சுஹ்ராவர்தி செலிபரேட்டிங் ஜின்னா சாப்ஸ்...
டைரக்ட் ஆக்‌ஷன் டே...
ஆஃகிர் ஃப்ரீஸ்ட் அண்டு ஃபார்மோஸ்ட் ஹி இஸ் எ முஸ்லீம் லீகி... 


1946 ஆகஸ்ட் 16ம்நாளை,ஜின்னா... பாகிஸ்தான் கோரிக்கைக்காக நேரடி நடவடிக்கையை அறிவித்தார்.
அதற்காக அன்று பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட...
இஸ்லாமிய முதலமைச்சர் சுஹ்ராவர்த்தி... அந்நாளைஅரசு விடுமுறையாக அறிவித்து விட்டார்.


முஸ்லீம்கள் சூறையாடலில் இறங்கியது...
பதிலடியாக சீக்கியர்களும்,இந்துக்களும் எதிர் சூறையாடலில் இறங்கியது...
பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.
ஆண்கள் என்றால் படுகொலை...
பெண்கள் என்றால் பாலியல் வன்முறை+படுகொலை.
ஹூக்ளி நதியில் படகுகள்... பிணங்களின் மீதுதான் மிதந்தன.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்த கருப்பு வரலாற்றின் எஸ்ஸென்சை மேற்படி டயலாக்கில் கேட்டோம்.
தொடர்ந்து காட்சிகளிலும் காணவிருக்கிறோம்.

Jun 8, 2012

Hey Ram-பாடலும்...பாடமும்...[2000\ஹேராம்=008]


இந்திய திரைப்படங்களில் பாடல் காட்சிகள் தவிர்க்க முடியாத பாக்டீரியா.
இந்த வேதியியலை மாற்ற வேண்டும் என்ற ஆவலை...
 தனது மூன்று படங்களில்...செயல்படுத்தினார்.
1.கடமை...கண்ணியம்...கட்டுப்பாடு[தயாரிப்பு]
2.குருதிப்புனல்,
3.உன்னைப்போல் ஒருவன்

வர்த்தக சினிமாவில் கூட பாடல்கள் திரைக்கதையின் ஓட்டத்தை சிதைக்காமல் பார்த்துக்கொள்வார்.
ஹேராமில் பாடல்கள்... படத்தின் மையக்கருத்தை வலியுறுத்துவதாக அமைத்துள்ளார்.


இப்பாடலில் வாலியின் வரிகள் கமலுடன் கை கோர்ப்பதை பாருங்கள்....
ராமரானாலும்...
பாபரானாலும்...
ரூட்டு ஒண்ணுதான்...
கேட்டு ஒண்ணுதான்-சிநேகிதா!
என்ற வரிகளை அம்ஜத் பாடுவதில் அர்த்தம் விரிவடைகிறது.

ஆரியர் வழி வந்த ராமரும்....இஸ்லாமியர் வழி வந்த பாபரும்...
கைபர் கணவாய் வழியாக... இந்தியாவிற்க்குள் வந்த வந்தேறிகள்...
என்ற வரலாற்றை...
ரூட்டு ஒண்ணுதான் என்ற வரிகளுக்குள் பொதிந்து வைத்திருப்பதை கண்டு வியக்கலாம்.

பாபர் மஸ்ஜித் என்றும்...ராம ஜென்ம பூமியென்றும்....ஒரே இடத்திற்க்குள்  அடைந்து கிடப்பதை....கேட்டு ஒண்ணுதான் என மொழி பெயர்கிறார் வாலி.

இதற்க்கு பின்னால் வரும் அனைத்து வரிகளுக்கும் அர்த்தம்...
எல்.கே.ஜி குழந்தை கூட புரிந்து கொள்ளும்.

உள்ளதை சொல்வபவர்...சொன்னதை செய்பவர் நாமே...என்ற வரிகளை படமாக்கும் போது...பார், மேசை மேல் ஏற முடியாத
சிந்தி லால்வானியை...முஸ்லீம் அம்ஜத்தும்...அய்யங்கார் ராமும் தூக்கி விடுகின்றனர்.
இயலாதவர்களை... இயன்றவர்கள் தூக்கி விட வேண்டும் என்ற செய்தியாகத்தானே இருக்க முடியும!

அம்ஜத்தும்,ராமும் வாளை எடுத்துக்கொண்டு சண்டையிடும்போது... குழந்தைகள் கை தட்டி சிரிக்கிறார்கள்.
மதங்களுக்கிடையே சண்டையிடுவது சிறுபிள்ளைத்தனமானது என்ற உண்மையை உணர்கிறோம்.
ஒரு பொருட் பன் மொழியாக... மீண்டும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்.
மூவரும் த்ரீ மஸ்கட்டியர்ஸ் போல் கோமாளித்தனமாக சண்டைபோடுகிறார்கள்.
மதவாதிகள் போடும் சண்டை அத்தனையும்
கோமாளித்தனமானது என்பதை மீண்டும் உணர்கிறோம்.

சண்டைக்கு முடிவாக மூவரும் தோளிலிருக்கும் துண்டை கழட்டி ஒன்றாக கோர்த்து ரவுண்டு கட்டி ஆடுகிறார்கள்.
நட்பு ஒன்றால்தான் மத நல்லிணக்கத்தை அடைய முடியும் என்பதை ஆணித்தரமாக... ஆடியே.... காட்டுகிறார்.

பாடல் முடிந்த பிறகு மூவரும் தமது கடவுள் பெயரைச்சொல்லிக்கொண்டு நீச்சல் குளத்தில் குதிக்கின்றனர்.

அனைவரும் கடவுள்...நம்பிக்கைகளை வச்சுக்கங்க....
ஆனால்...அதை அவரவர்களுக்குள் வச்சுகிட்டு....
நட்பு என்ற வட்டத்துக்குள் வந்து விடுங்கள்..
அங்கே... களிப்பும் கொண்டாட்டம் மட்டுமே இருக்கும்.
இதுவே பாடலின் பைனல் பஞ்ச்.

இப்பாடலின் நடுவில்... அவ்வப்போது வீலர் என்ற வெள்ளைக்காரன் போட்டோ எடுப்பது போல் குறுக்கிடுகிறான்.
பாடல் தடைபடுகிறது.
இக்குறியீட்டை ஸ்கிரிப்டிலேயே எழுதியிருக்கிறார்.

இந்துவும்... முஸ்லீமும் ஒற்றுமையாக இருப்பது வெள்ளைக்காரனுக்கு பிடிக்காது.
அன்றும்...இன்றும்...என்றும்.
அந்த ஒற்றுமையை குலைப்பதில் அவன் என்றுமே மும்முரமாக இருந்தான் என்பதைத்தான்... குறியீடாக்கி உள்ளாரோ.

எனக்கு தெரிந்த ஒரு குறியீட்டை....
சொல்லாமல் பதுக்கி வைத்துள்ளேன்...கண்டு பிடியுங்கள்.
கண்டுபிடித்து விட்டால்... நீங்கள்தான் எம்.ஜி.யார்.
நான் என்.எஸ்.கே.

Jun 3, 2012

Hey Ram- குறியீடுகளின் களஞ்சியம் [2000/ஹேராம்=007]


ஹேராம் தொடரில் குறியீடு...குறியீடுன்னு... சொல்லிகிட்டே இருக்கானே...
அது என்ன?
சிலருக்கு... மட்டும் அந்த கேள்வி வரலாம்.
மன்னிக்கவும்...அவர்களுக்காக இந்த எளிய விளக்கம்.

சினிமா... குறியீடுகளால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கிறது.
குறியீடுகள்...
காட்சி
எழுத்து
பேச்சு
இசை
சப்தம்
இவை போன்றவைகளால் ஆனது.

குறியீடு என்றால்... ஆங்கிலத்தில்... செமியாட்டிக்ஸ்[Semiotics].
செமியாட்டிக்ஸ்.. வகைகளில் இரண்டை மட்டும் இப்போது பார்ப்போம்.

1..டினோட்டஷன் [Denotation]
கண்ணை மூடிக்கொண்டு ஒலிச்சித்திரம் கேட்டால்...மனக்கண்ணில் திரைப்படம் மட்டும் தெரிந்தால் டினோட்டேஷன்.
உதாரணம்...பராசக்தி,மனோகரா,வீரபாண்டிய கட்ட பொம்மன்.

2.கனோட்டேஷன் [Connotation ]
சிவாஜி படத்தில் ஸ்ரேயாவின் பாடல் காட்சி...


டினோட்டேஷன்காட்சியானது...ஸ்ரேயாவால்.....நமக்குள் கனோட்டேஷன் வகையில் இயங்குகிறது.
 கனோட்டேஷன்... இங்கே, செக்சுவல் கனோட்டேஷனாக.... நமது மூளையில் கொந்தளிக்கிறது.
ஸ்ரேயா எவ்வளவு காட்டப்படுகிறார்?...
மறைக்கப்பட்ட ஸ்மால் ஏரியாவில் இருப்பது என்ன?...
ஆடும் போது...கஞ்சத்தனமாக தைக்கப்பட்ட மார்பு கச்சை விலகி...
இன்னும் தெரியாதா?
என நம்ம மூளை ஜிவ்வென்று வேலை செய்யும்...
இப்படி... உங்கள் ஆழ் மனது அபிலாசைகளுக்கு செம தீனி போடுவார் இயக்குனர் சங்கர் .
இந்த தில்லாலங்கடியில் அவர் ஜித்தன்.

கமல் போன்ற மேதைகள் கனோட்டஷன் பிராசசை 
இண்டலக்சுவலாக... கையாள்வார்கள்.
நம்முள் சினர்ஜி [Synergy... 1+1=10] இயங்க வைத்து விடுவார்கள்.
திரையில் கண்ணால் பார்க்கும் ஒன்று...உங்கள் மூளையில் ஒன்றுக்கு பத்தாக நீங்கள் ஏற்க்கெனவே படித்த...பார்த்த...கேள்விப்பட்ட...என எல்லா ஏரியாவிலும் கனெக்ட் பண்ணும்.

உதாரணமாக... ஹேராமில்...
“ராமரானாலும்...பாபரானாலும்”....
பாடல் தொடக்கத்துக்கு போவோம்.



அம்ஜத்...பாடல் தொடங்கும் முன் இசைக்கலைஞர்களுக்கு...
என்ன மியூசிக் நோட்ஸ்?... என்பதை சைகையால் விளக்குகிறான்.
இந்த காட்சி அம்ஜத்... இசையிலும் வித்தகன் என ரிஜிஸ்டர் ஆகிறது.
ஏற்க்கெனவே சாகேத்ராம்... வீலர் பியோனோ வாசிக்கும் போது லால்வானி தோளில் பிங்கரிங் செய்த காட்சி கனெக்டாகி... இருவருமே இசை கற்றவர்கள் என கனெக்ட் ஆகிறது.
சென்னை கிரிஸ்டியன் காலேஜில் படித்தவர்கள்... என்ற டயலாக்கை... கனெக்ட் செய்கிறது.
கிறிஸ்டியன் காலேஜ்....வெள்ளைக்காரனால் நடத்தப்பட்டது கனெக்ட் ஆகிறது.
வெள்ளைக்காரன் தனக்கு அடிமை வேலை செய்ய இந்த இருவரையுமே மெக்காலே கல்வி திட்டத்தின் மூலமாக தயார் செய்திருப்பது கனெக்ட் ஆகிறது.
மெக்காலே திட்டத்தினால்... இந்தியர்களின் கலாச்சாரத்தையும்..
கல்வி முறையையும் உடைத்து...தனது கல்வித்திட்டத்தினால் மூளைச்சலவை செய்து..அடிமைகளாக்கி..1858லிருந்து 1947 வரை சுரண்டப்பட்டது... கனெக்ட் ஆகிறது.

நான் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு கொஞ்சம் படித்திருப்பதால்... இது  கனெக்ட் ஆகிறது.
படித்திராவிட்டால்...
அம்ஜத் ஏதோ மியுசிக் நோட்ஸ் வாசிக்க சொல்லி சைகை காண்பிக்கிறான் என்பது ரிஜிஸ்டர் ஆகும்.
சர்வர் சுந்தரத்தில்...
அவளுக்கென்ன...அழகிய முகம்.... அவளுக்கென்ன.... பாடலில்...
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி சைகை செய்வது கனெக்ட் ஆகும்.

மிகவும் படித்த மேதைகளுக்கு... இன்னும் கனெக்ட் பண்ணும்.
என் குருவி மூளைக்கு இவ்வளவுதான் எட்டியது.

பாடலுக்கு முன்னால் போட்ட... ஒரே ஒரு ஷாட் இவ்வளவு கனெக்ட் பண்ணுதே!
பாடல் எவ்வளவு கனெக்ட் பண்ணும்?
பாடலை திரும்ப ...திரும்ப பாருங்கள்...
அடுத்தப்பதிவில் ஷேர் பண்ணிக்கலாம்.

செமியாட்டிக்ஸ் பற்றி மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவுக்கு செல்லுங்கள்.http://en.wikipedia.org/wiki/Semiotics